இன்றைய OTP!

கீதாசாரம் : எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்; உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்?; எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?; எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?; எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது; எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது; எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது; மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

வாயாடி என சொல்லாதீர்கள், குரல்வளையை நசுக்காதீர்கள்!

வாயாடி என சொல்லாதீர்கள், குரல்வளையை நசுக்காதீர்கள்! ஒரு குடும்ப நிகழ்வு. வயது வித்தியாசமின்றி சிறியவர் பெரியவர் என அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். 70 வயது தாத்தா ஒருவர், மூன்றாம் வகுப்புப் படிக்கின்ற சுட்டியிடம் விளையாட்டாக ‘என்னை கல்யாணம் பண்ணிக்கறியா?’ என வேடிக்கையாக கேட்டார். அதற்கு அந்த சிறுமி, ‘ஏன் பாட்டி அழகாகத் தானே இருக்கா?’…

ஆக்கப்பூர்வமான விஷயங்களை Ai மூலம் செய்வதில் மகிழ்ச்சி! (குமுதம் சிநேகிதி : மே 2, 2024)

புத்தக வடிவிலேயே வாசிக்க: குமுதம் சிநேகிதி மே 2, 2024 Ai குறித்து நாங்கள் செய்து வரும் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், ப்ராஜெக்ட்டுகள் குறித்த நேர்காணல் 02-05-2024 குமுதம் சிநேகிதியில். வாய்ப்பிருப்பவர்கள் வாசிக்கவும். குறிப்பாக நான் அண்மையில் எழுதி, அச்சு புத்தகத்தில் பேசும் அவதார் என்ற புதுமையை பதிப்பகத் துறையில் முதன் முதலாகப் புகுத்தி சாதனை செய்து…

அசத்தும் Ai – நூல்களால் பயன்பெற்றோர்

அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai-Part2(இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) நூல்களின் சிறப்பம்சம்   ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு Ai அவதார் வாசகர்களுடன் பேசும். பதிப்பக உலகில் அச்சு புத்தகத்தில் Ai அவதார் தோன்றி பேசுவதெல்லாம் முதன் முயற்சி என்பதுடன் வாசகர்களுக்கு புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும். எங்கள் ஐடி நிறுவனத்தில் நாங்கள் தயாரிக்கும் Ai சாஃப்ட்வேர்கள் மற்றும் ஆப்கள் மூலம் நேரடியாகக்…

ஜனநாயகக் கடமை!

ஜனநாயகக் கடமையை செய்ய எங்கள் இருப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள பள்ளிக்கு 7 மணிக்கே அப்பா அம்மாவுடன் சென்றுவிட்டேன். எங்களுக்கும் முன்பே அந்தப் பள்ளியில் உள்ள அத்தனை வார்டுகளிலும் மக்கள் வரிசையில் நின்றிருந்தார்கள். குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் பார்ப்பதற்கே ரம்யமாக இருந்தது. எங்கள் வார்டை தவிர மற்ற வார்டுகளில் உள்ள வரிசை வெகு சீக்கிரம் நகர்ந்து கொண்டே…

#Ai: Respect Knowledge!

சிலர் தங்கள் துறையில் Ai ஐ எப்படி பயன்படுத்துவது என்று நட்பு ரீதியில் ஆலோசனை கேட்கிறார்கள். ‘ஜஸ்ட் லைக் தட்’ பதில் சொல்லி கடந்து விட முடியாது. ஏனெனில் Ai ஒரு கடல். ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த நெட்வொர்க் Ai. எனவேதான் நான் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அவர்களுக்கு 3 வழிகளை சொல்கிறேன். நான்…

மதுரை SLS MAVMM ஆயிர வைசியர் கல்லூரி – மாநில அளவிலான இணையவழி கருத்தரங்கம் – அசத்தும் Ai (ஏப்ரல் 15, 2024)

மதுரை மாநகரில்! காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் ஏப்ரல் 15, 2024 | திங்கள் மதுரை SLS MAVMM ஆயிர வைசியர் கல்லூரி நடத்திய மாநில அளவிலான இணையவழி கருத்தரங்கம், ஏப்ரல் 15, 2024 காலை 10.30 முதல் 1.00 மணி வரை மிக சிறப்பாக நடைபெற்றது. 10.30 – 11.00 வரை:  இறை வணக்கமும்,…

அம்மா செளக்கியம், அப்பாவும் நன்றாக இருக்கிறார்!

அம்மா செளக்கியம், அப்பாவும் நன்றாக இருக்கிறார்! ‘நீங்க உங்க அப்பா அம்மாவை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதாக சென்ற பதிவில் சொல்லி இருந்தீர்களே, அதை மற்றவர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள். அவ்வளவு அன்பாக, மரியாதையாக பொதுவெளியில் நடந்து கொள்வீர்களா? என் பிள்ளைகளை இப்போதில் இருந்தே அப்படி வளர்க்கவே கேட்கிறேன்’ என்று ஒரு நடுத்தர வயது…

கண் திருஷ்டி!

கண் திருஷ்டி! ஒரு டாக்‌ஷோவில் தன் மகன் 20 தோசைகள் சாப்பிடுவான், அதுவும் எப்படி தெரியுமா? என்று பெருமையுடன் பேசிய ஒரு அம்மாவின் மகன் அண்மையில் ரயில் விபத்தில் இறந்துவிட்டதாக செய்தி வந்தபோது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் அனுதாபிகளின் கருத்து என்ன தெரியுமா? ‘திருஷ்டி பட்டுவிட்டது’. உண்மைதான். இதில் உங்களுக்கெல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ நிச்சயமாக…

முதல் வங்கிக் கணக்கு!

முதல் வங்கிக் கணக்கு! இன்று காலை ஒரு அலைபேசி அழைப்பு. என் பெயரை கேட்டு உறுதி செய்து கொண்டார். ‘என்னை நினைவிருக்கிறதா? உங்கள் காம்கேர் நிறுவனத்துக்காக ஆலந்தூர் கரூர் வைஸ்யா பேங்கில் அக்கவுண்ட் ஓபன் செய்ய வந்தபோது நான் தான் மேனேஜராக இருந்தேன்…’ என்று தன் பெயரை சொல்லி அறிமுகம் செய்துகொண்ட போது எனக்கு மிகவும்…

நம்மை ஆளப்போகும் Ai [1] : லேடீஸ் ஸ்பெஷல் ஏப்ரல் 2024

புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்! Artificial iNtelligence என்பதன் சுருக்கம் Ai. இதன் அடிப்படையே சிந்திக்கும் திறன். இந்த சிந்திக்கும் திறன் தான் மனிதனை மற்ற ஜீவராசிகளிடம் இருந்து வித்தியாசப்படுத்தி உயர்த்துகிறது. இதனால்தான் தான் சொகுசாக வாழ்வதற்கு மனிதன் சதா சிந்தித்துக் கொண்டே இருக்கிறான். புதிதுபுதிதாக கண்டுபிடிப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறான். ‘போதாது,…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon