#கவிதை: அடடே ஆச்சர்யக்குறி!

ஒரு விஷயம்

அழகாக இருந்தால்
அது கவிதை!

அருமையாக இருந்தால்
அது கட்டுரை!

அம்சமாக இருந்தால்
அது கதை!

ஒரே விஷயம்தான்
ஆனால் பாராட்டப் பயன்படுத்தும்
வார்த்தைகளால்
வித்தியாசப்படுவது
ஆச்சர்யம்!

அட ஆமாம் இல்ல…
வித்தியாசமாக இருந்தால்
அது ஆச்சர்யம்!

காம்கேர் கே. புவனேஸ்வரி
மார்ச் 19, 2021

(Visited 93 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon