#கவிதை: நினைப்புதான் பிழைப்பை கொடுக்கும்!

நினைப்புதான் பிழைப்பை கொடுக்கும்! மகிழ்ச்சியாய் வாழ்வதைவிட மகிழ்ச்சியாய் வாழ்கிறோம் என்ற நினைப்பே அதிக மகிழ்ச்சியாக இருக்கும்… ருசியான விருந்தை திருப்தியாக சாப்பிடுவதைவிட அருமையான சாப்பாடு சாப்பிட்டோம் என்ற நினைப்பே அதிக திருப்தியாக இருக்கும்… நாம் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக இருப்பதைவிட நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்ற நினைப்பே அதிக ஆரோக்கியமான உணர்வைக் கொடுக்கும்… அதுபோல் தான்…

#கவிதை: நீங்கள் சோம்பேறியா? சுறுசுறுப்பா?

நீங்கள் சோம்பேறியா? சுறுசுறுப்பா? சுறுசுறுப்பாய் இருக்கிறீர்களா? பிசியான நபரா? நல்ல திறமைசாலியா? இதனால் குறைந்த நேரத்தில் பல வேலைகளை முடிக்கும் நபரா? அதுவும் காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் முடித்துப் போட்டுவிட்டு அடுத்த வேலையை கவனிக்கச் சென்றுவிடுகிறீர்களா? அப்படியானால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்குக் கிடைக்கும் பெயர் உங்களுக்கு நேரம் நிறைய இருக்கிறது… பொழுதுபோகவில்லை… வேலையா வெட்டியா……

#கவிதை: சில நேரங்களில் சில அபத்தங்கள்!

சில நேரங்களில் சில அபத்தங்கள்! அபத்தங்களில் எல்லாம் மிகவும் அபத்தமானது நமக்குப் பிடிப்பவர்கள் எல்லோருக்கும் நம்மைப் பிடிக்கும் என எண்ணுவதுதான்! அது அபத்தமாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே அதனால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லையே நாம்! எத்தனைக்கு எத்தனை நமக்குப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறதோ அத்தனைக்கு அத்தனை நம் மனம் அன்பால் ரொம்பி வழிவது சர்வ நிச்சயம்! அதுவே…

#கவிதை: உங்கள் தொப்பியில் புது இறகு!

‘Another feather in your cap’ அன்பை பிறரிடம் எதிர்பார்த்து நாம் ஏமாற்றம் அடைவது நரகத்தை விட நரகம்! அன்பை காட்டும் / கொட்டும் இடத்தில் நாம் இருப்பது சொர்க்கத்தை விட சொர்க்கமாக இருக்கும் என சொல்வதை விட ஒருவித கர்வமாக இருக்கும் என்று சொல்லலாம். அந்த கர்வத்துக்கு கம்பீரம் என்றும் தன்னம்பிக்கை என்றும் பெயர்…

#கவிதை: சர்வரும் மெனு கார்டும் இல்லாத ஓட்டல்!

சர்வரும் மெனு கார்டும் இல்லாத ஓட்டல்! அந்த ஊர் ஓட்டலில் நமக்கு மெனு கார்ட் எல்லாம் கிடையாது… சர்வரோ, சப்ளையரோ அல்லது வேறு யாருமோ நம்மை அணுகி ‘சாப்பிட என்ன வேணும்?’ என்று கேட்க மாட்டார்கள்… அப்படியானால் அது ‘செல்ஃப் சர்வீஸ்’ ஓட்டலாக இருக்குமோ என நினைக்க வேண்டாம்… நிச்சயமாக அது செல்ஃப் சர்வீஸ் ஓட்டலும்…

#கவிதை: இன்னும் கொஞ்சம்!

இன்னும் கொஞ்சம்! ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவருடைய வயதான தாய் தந்தையின் மறைவுச் செய்தி பதிவுகளைக் காணும் போதும் செய்திகளை கேட்கும் போதும் மரணம் பற்றி பயமோ வாழ்க்கை மீதான விரக்தியோ உண்டாவதில்லை எனக்கு என்ன தோன்றும் தெரியுமா? என் அப்பா அம்மாவிடம் ‘இன்னும் கொஞ்சம்’ பாசமாக இருக்க வேண்டும்… ‘இன்னும் கொஞ்சம்’ பொறுமையாக இருக்க…

#கவிதை: அழகுக் குழந்தைகள்!

அழகுக் குழந்தைகள்! குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் முதன் முறை நம்மைப் பார்க்கும் சுட்டியிடம் ‘அத்தை’ – ன்னு கூப்பிடு ‘பாட்டி’- ன்னு கூப்பிடு என்று சொல்லிக்கொடுக்கும் உறவினர்கள் வார்த்தைகளை எல்லாம் காதில் ஏற்றிக் கொள்ளாமல் நம்மை மேலும் கீழும் பார்த்துவிட்டு நான் ‘அக்கான்னுதான்’ கூப்பிடுவேன் எனச் சொல்லி அடம் பிடிப்பதுடன் அப்படியே நம்மை அழைக்கும் குட்டிக்…

#கவிதை: குழந்தைப் பருவம்!

குழந்தைப் பருவம்! நம் குழந்தைப் பருவம் என்பது பெற்றோர் நமக்குக் கொடுத்த அன்பளிப்பு. நம் குழந்தைப் பருவத்தை மற்றவர்களுக்கு உதாரணமாக்கும் அளவுக்கு நாம் வாழ்ந்து காட்டுவது பெற்றோருக்கு நாம் கொடுக்கும் அன்பளிப்பு! விலைமதிப்பில்லா அன்பளிப்பு அது! எல்லோராலும் கொடுக்கக் கூடியது அது! பல சந்தர்ப்பங்களில் அந்த அன்பளிப்பை நான் வெவ்வேறு வடிவங்களில் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்…

#கவிதை: நினைத்ததை கேட்கும் காதுகள்!

நினைத்ததை கேட்கும் காதுகள்! சிவன் கோயிலின் நந்தியின் காதில் நான்கைந்து வயதிருக்கும் குட்டி தேவதையை தூக்கிக் காண்பித்த ஒரு பாட்டியும் உடன் நின்றிருந்த அம்மாவும் ‘பெயரோடும் புகழோடும் இருக்கணும்னு வேண்டிக்கோ செல்லம்’ என்றார்கள்! நான் தன்னிச்சையாக மனதுக்குள் ‘குணத்துடனும், நல்ல உடல் நலனுடனும் இருக்கணும்னு சேர்த்து வேண்டிக்கோ கண்ணம்மா!’ என்றேன்! நான் மனதுக்குள் நினைத்தது அந்தக்…

#கவிதை: அப்பாக்களின் பரிதாபங்கள்!

அப்பாக்களின் பரிதாபங்கள்! நிகழ்ச்சிகளில் எண்பதை நெருங்கும் அல்லது எண்பதைத் தாண்டிய அப்பாக்களுக்குத்தான் எத்தனை சந்தோஷம் தன்னை மட்டும் பிரத்யோகமாக கவனித்து புகைப்படம் எடுப்பவர்களைப் பார்த்து… புகைப்படம் எடுத்தவரிடம் எம் பொண்ணு / எம் பையன் அதோ இருக்காள் / இருக்கான் பாருங்கள்… அவளிடம் / அவனிடம் காண்பியுங்கள் என்று கண்கள் சிரிக்க சொல்லும் போது கொஞ்சம்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon