இன்றைய OTP!

கீதாசாரம் : எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்; உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்?; எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?; எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?; எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது; எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது; எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது; மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

காரைக்குடி ஜாடிகள்!

காரைக்குடியில் செட்டிநாட்டு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பீங்கான் ஜாடிகள் பிரபலம். தனித்துவமாகவும் இருக்கும். பிப்ரவரி மாதம் 2024 –ல் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் Ai குறித்து பேசுவதற்காக ஒரு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். காரைக்குடி செல்வது அதுவே முதன்முறை என்பதால் கூடுதலாக இரண்டு நாட்கள் தங்கி இருந்து ஊரை சுற்றிப் பார்த்தோம். ஒருநாள் இரவு. சுற்றி…

வறட்சியாகி விட்டதா நேர்மை?

வறட்சியாகி விட்டதா நேர்மை? நேற்று வேளச்சேரியில் ஒரு பகுதியில் டிராஃபிக் ஜாம். வேளச்சேரியில் ‘டிராஃபிக் ஜாம்’ ஆகாத இடம் ஏதேனும் இருக்கிறதா என நானே என்னைக் கேட்டுக் கொண்டு எழுதுகிறேன். யோக நரசிம்மர் கோவிலின் மெயின் ரோடை பார்த்த நுழைவாயிலில் காரை நிறுத்திவிட்டு ஒருவர் உள்ளே சென்றிருப்பார் போல. அதனால் எதிரில் இருந்து பஸ் முன்னேறி…

இன்னுமா அதே கம்பெனியில் வேலை செய்கிறாய்?

இன்னுமா அதே கம்பெனியில் வேலை செய்கிறாய்? புகைப்படம்: நான்கு மாதங்களுக்கு முன்னர் (பிப்ரவரி மாதம்) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் Ai குறித்து பேசுவதற்காக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு எடுத்த செல்ஃபி. —- இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 14 வருடங்களுக்கு மேல் பணிபுரியும் ஒரு இளைஞரை (36) சந்தித்தேன். அவருடைய அப்பா அம்மா எங்கள் குடும்ப நண்பர்கள்…

திருமணங்கள்!

திருமணங்கள்! ஒரு பெண் 53 ஆண்களை மேட்ரிமோனி வெப்சைட் மூலம் தொடர்பு கொண்டு ஏமாற்றி திருமணம் செய்ததுதான் நேற்றைய பேசுபொருள். இதற்கு தன் சொந்தப் பதிவுகள் மூலமும், பிறரது பதிவுகளுக்கு கமெண்ட் செய்வதன் மூலமும் வயது வித்தியாசம் இல்லாமல் நிறைய ஆண்கள், தங்கள் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்கள். ஒவ்வொன்றிலும் மூன்றாம்தர எண்ண ஓட்டங்கள், வக்கிர எண்ணங்கள். என்னடா…

#Ai: ஏஐ ப்ராம்ப்ட்டிங்!

எங்கள் காம்கேரில் என் அறையில் நான் கோபமாக இருப்பதாக Prompt கொடுத்து, என் புகைப்படத்தையும் கொடுத்து வரையச் சொன்னேன். அதற்கு Ai வரைந்து கொடுத்த படம். கோபத்தில் கன்னங்களும் காதுகளும் சிவக்கும்படி ப்ராம்ப்ட் கொடுத்திருந்தேன். அருமையாக வரைந்து கொடுத்துள்ளது. Ai – இடம் ப்ராம்ப்ட் கொடுத்து வேலை வாங்குவது எப்படி என்பது குறித்து புத்தகம் தயார்…

நம்மை ஆளப்போகும் Ai [4] : ஹிட்லருக்கும் தெரியுமே Ai தொழில்நுட்பம்! லேடீஸ் ஸ்பெஷல் ஜூலை 2024

புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்! ஹிட்லருக்கும் தெரியுமே Ai தொழில்நுட்பம்! ஹிட்லரும் Ai தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறார் என சொன்னால் நம்ப முடிகிறதா உங்களால்? உண்மை அதுதான் என்றால் நம்பித்தானே ஆக வேண்டும். இரண்டாம் உலகப் போரில் அடால்ஃப் ஹிட்லர், உலகம் முழுவதும் உள்ள தனது போர் ஆயுதங்களை தன் இருப்பிடத்தில் இருந்தே…

Favour அல்ல Privilege!

Favour அல்ல Privilege! ஒரு முறை என் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கோயில் சென்றுவிட்டு அருகிலேயே கைவினைப்பொருட்கள் மற்றும் உடைகள் கண்காட்சி போட்டிருந்ததால் அங்கும் சென்றிருந்தோம். ஒரு சுடிதாரை என் அப்பாம்மாவிடம் காண்பிப்பதற்காக ‘அப்பா… அம்மா…’ என சப்தமாக கூப்பிட்டேன். உடன் வந்திருந்த உறவினர் ‘பெரிய கம்பெனி நடத்துகிறாய்… ஒரு சுடிதார் வாங்குவதற்கு அப்பா அம்மாவை…

மாறிவரும் வியாபாரக் கண்ணோட்டம்!

மாறிவரும் வியாபாரக் கண்ணோட்டம்! முன்பெல்லாம் ஒரு கடை முதலாளியோ அல்லது நிறுவனத் தலைவரோ தான் வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்த மிகவும் தன்மையாகவும், அறிவார்த்தமாகவும் யோசிப்பார்கள். செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் தன் பணியாளர்களில் திறமையானவர்களை கூப்பிட்டு அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண சொல்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் நிலைமை அப்படியே உல்டா. நிர்வாகத் தலைமை வாடிக்கையாளர் பிரச்சனை…

தலைவாழை விருந்தும், பஃபே சிஸ்டமும்!

  தலைவாழை விருந்தும், பஃபே சிஸ்டமும்! அண்மையில் ஒரு குடும்ப நிகழ்ச்சி. உயர்தர ஓட்டலில் அருமையான ருசியான விருந்து. பஃபே சிஸ்டம். தலைவாழை இலை போட்டு வடை பாயசத்துடன் விருந்து உபசரிப்பு ஒரு ரகம் என்றால் தேவையானதை, விருப்பமானதை கேட்டு வாங்கி சாப்பிடும் பஃபே என்பது வேறொரு ரகம். இரண்டுமே எந்த விதத்திலும் சளைத்தது இல்லை….

#Ai: Meta Ai, நான் யார் சொல்!

Meta Ai, நான் யார் சொல்! வாட்ஸ் அப்பிலும், மெசஞ்சரிலும் Meta Ai வந்த பிறகு முதன் முதலில் அதனிடம் கேட்கப்படும் கேள்வி 90% என்னவாக இருக்கிறது தெரியுமா? அவரவர்கள் பெயரை கொடுத்து ‘இது யார்? இவரைப் பற்றி சொல்’ என்பதாகவே இருக்கிறது. மனிதர்களுக்கு தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது….

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon