இன்றைய OTP!
கீதாசாரம் : எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்; உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்?; எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?; எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?; எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது; எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது; எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது; மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

படைப்பாளியாகும் செயற்கை நுண்ணறிவு!
படைப்பாளியாகும் செயற்கை நுண்ணறிவு (Generative AI) எழுத்தும், ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் ‘இதுதான் செயற்கை நுண்ணறிவு’ என்றெல்லாம் தெரியாத, தொழில்நுட்பம் அறியாத நம்மில் பலரும் அதன் பயனை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். நம் மொபைல் திரையில் நம் முகத்தைக் காட்டினால் அன்லாக் ஆகி உள்ளே செல்வது, ஓடிடி தளங்களில் நாம் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்காகத்…

மலர்வனம் மின்னிதழ் சாதனைப் பெண்கள் நிகழ்ச்சி (February 19, 2023)
மலர்வனம் மின்னிதழ் பல்துறை சார்ந்த 15 சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தது. அந்த நிகழ்ச்சிக்கு கண் மருத்துவர் கல்பனா சுரேஷ் அவர்களுடன் காம்கேர் கே. புவனேஸ்வரியும் சிறப்பு அழைப்பாளர்கள். அந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் விருது வழங்கிய பிறகு காம்கேர் கே. புவனேஸ்வரி ஆற்றிய உரையின் சாராம்சம் இதோ உங்கள் வாசிப்பிற்கும்! நிகழ்ச்சியில் காம்கேர் கே….

#கவிதை: நினைப்புதான் பிழைப்பை கொடுக்கும்!
நினைப்புதான் பிழைப்பை கொடுக்கும்! மகிழ்ச்சியாய் வாழ்வதைவிட மகிழ்ச்சியாய் வாழ்கிறோம் என்ற நினைப்பே அதிக மகிழ்ச்சியாக இருக்கும்… ருசியான விருந்தை திருப்தியாக சாப்பிடுவதைவிட அருமையான சாப்பாடு சாப்பிட்டோம் என்ற நினைப்பே அதிக திருப்தியாக இருக்கும்… நாம் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக இருப்பதைவிட நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்ற நினைப்பே அதிக ஆரோக்கியமான உணர்வைக் கொடுக்கும்… அதுபோல் தான்…

மொழிபெயர்ப்பா? முழிபெயர்ப்பா?
மொழிபெயர்ப்பா? முழிபெயர்ப்பா? ஆன்லைன் பத்திரிகை ஒன்று. கொஞ்சம் பிரபலமானதும் கூட. அதில் சமீபத்தில் தமிழில் எழுதப்பட்டிருந்த ஒரு தொழில்நுட்பக் கட்டுரையை படித்தேன். எழுதியவர் சிறு வயது பெண்தான். இளங்கலை கம்ப்யூட்டர் சயின்ஸ் இப்போதுதான் முடித்துள்ளார் என கட்டுரையாளர் குறிப்பில் போடப்பட்டிருந்தது. அப்படிப் பார்த்தால் வயது 20, 21 க்குள்தான் இருக்க வேண்டும். அவர் பயன்படுத்தி இருந்த…

Communication makes the successful completion of any task!
Communication makes the successful completion of any task! ஒரு சின்ன கருத்து வேறுபாட்டில் என்னை அதிகம் அறிந்திராத ஒருவர் என்னிடம் ‘நீங்கள் ரொம்ப சுயநலம். உங்களுக்குத் தேவை என்றால் நான்கு முறை அழைக்கிறீர்கள். இரண்டு முறை வாட்ஸ் அப்பில் நினைவூட்டுகிறீர்கள்…’ என்றார். இத்தனைக்கும் அவர் ஒன்றும் எனக்காக மலையைத் தூக்கி வைக்கும் உதவியை…

நெஞ்சு ஒடிவதைவிட கால் ஒடிவது!
நெஞ்சு ஒடிவதைவிட கால் ஒடிவது! எழுத்தாளர் ஜெயகாந்தன் ’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலில் நாயகியின் காலை முடமாக்குவதாக காட்டியிருப்பதற்கு, ‘நெஞ்சு ஒடிவதைவிட கால் ஒடிவது குறைந்த விபத்தல்லவா?’ அதனால்தான் அப்படி கதையின் போக்கைக் கொண்டு சென்றேன் என்று அந்த நாவலின் முன்னுரையில் எழுதி இருப்பார். அந்த நாவலை முழுமையாகப் படித்திருப்பவர்களுக்கு அவர் என்ன கோணத்தில்…

தர்மங்கள் தழைத்தோங்க!
தர்மங்கள் தழைத்தோங்க! ஓவியர்: ஸ்யாம். கதை எழுதியவர்: கே. புவனேஸ்வரி கதை வெளியான பத்திரிகை: ராஜம் இந்தக் கதைக்கு ஓவியம் வரைந்தபோது ஓவியருக்கு வயது 15. இந்தக் கதை எழுதியபோது நான் கல்லூரியில் (பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்) அடி எடுத்து வைத்திருந்தேன். அப்போது ராஜம் பத்திரிகையின் ஆசிரியர் / எடிட்டர் சந்திரா ராஜசேகர் அவர்கள். இந்தக்…

பேசக் கூட லாஜிக்கா?
பேசக் கூட லாஜிக்கா? நான் பரம்பரை மேடைப் பேச்சாளர் அல்ல. பள்ளி கல்லூரியில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டதும் இல்லை. ஆனாலும் பார்வையாளர்கள் கூர்ந்து கவனிக்கும் அளவுக்கு பேச முடிகிறது என்றால் அதற்கு நான் பின்பற்றும் மூன்று உத்திகள்… 1. என் முன்னால் யாருமே இல்லை. பார்வையாளர் பகுதியில் மிக பிரமாண்டமான கண்ணாடி மட்டுமே…

#கவிதை: நீங்கள் சோம்பேறியா? சுறுசுறுப்பா?
நீங்கள் சோம்பேறியா? சுறுசுறுப்பா? சுறுசுறுப்பாய் இருக்கிறீர்களா? பிசியான நபரா? நல்ல திறமைசாலியா? இதனால் குறைந்த நேரத்தில் பல வேலைகளை முடிக்கும் நபரா? அதுவும் காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் முடித்துப் போட்டுவிட்டு அடுத்த வேலையை கவனிக்கச் சென்றுவிடுகிறீர்களா? அப்படியானால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்குக் கிடைக்கும் பெயர் உங்களுக்கு நேரம் நிறைய இருக்கிறது… பொழுதுபோகவில்லை… வேலையா வெட்டியா……

#கவிதை: சில நேரங்களில் சில அபத்தங்கள்!
சில நேரங்களில் சில அபத்தங்கள்! அபத்தங்களில் எல்லாம் மிகவும் அபத்தமானது நமக்குப் பிடிப்பவர்கள் எல்லோருக்கும் நம்மைப் பிடிக்கும் என எண்ணுவதுதான்! அது அபத்தமாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே அதனால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லையே நாம்! எத்தனைக்கு எத்தனை நமக்குப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறதோ அத்தனைக்கு அத்தனை நம் மனம் அன்பால் ரொம்பி வழிவது சர்வ நிச்சயம்! அதுவே…