எது முக்கியம்

அண்மையில் சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு பெண்கள் விடுதியில் ரகசிய கேமிராக்கள் வைத்து பெண்களை வீடியோ எடுத்து வருவதை அந்த விடுதிப் பெண்கள் மொபைல் ஆப் மூலம் கண்டறிந்து போலீஸில் புகார் அளிக்க அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து பரவலாக எல்லா மீடியாக்களிலும் ‘பெண்களே உஷார்… இரகசிய கேமிராக்கள் உங்களை கவனிக்கின்றன…’ என்பதே செய்தி.

கைது செய்யப்பட்ட ஆண்களின் முகத்துடன் கைது செய்து போலீஸ் அழைத்துச் செல்லும் புகைப்படத்தையும் போட்டு அதன் கீழ்

‘ஆண்களே… கேமிராக்களை வைத்து பெண்களை சீரழித்தால் இப்படித்தான் கைது செய்யப்பட்டு அவமானப்படுவீர்கள்… தண்டனை அடைவீர்கள்… தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு…’ என்றல்லவா(என்றுமல்லவா) செய்திகள் பரவ வேண்டும்.

பெண்களை உஷார் செய்ய வேண்டியதுதான். ஆனால் தவறு செய்தால் தண்டனை நிச்சயம் உண்டு என்பதையும் ஆண்கள் மனதில் விதைத்து உஷார் செய்ய வேண்டியதும் அவசியம் தானே.

என்னைக் கேட்டால் முன்னதை விட பின்னது அதிமுக்கியம்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
டிசம்பர் 7, 2018

(Visited 108 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon