பிரமாண்ட மேடையில் கெளரவம்!
11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை மலேசியா நாட்டுப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் அதிகாரப் பூர்வமாக திறந்து வைத்தார். மாநாட்டின் நிறைவு விழாவில் மலேசியா துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, மலாயாப் பல்கலைக்கழகம் துணைவேந்தர், மலாயாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இராஜேந்திரன் போன்றோர் வீற்றிருக்கும் மேடையில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக நானும் கெளரவிக்கப்பட்டேன்.
இது எனக்கு மட்டுமல்ல, நம் இந்திய மக்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்தது. என்னை இந்த நிலைக்கு உயர்த்திய பெற்றோருக்கும், இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றியை தவிர வேறென்ன சொல்ல?
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
ஜூலை 2023
(Visited 19 times, 1 visits today)









