ஜம்முனு வாழ காம்கேரின் OTP-69: மெய்நிகர் திருவிழா – நிறைவுநாள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 69
மார்ச் 10, 2021

மெய்நிகர் திருவிழா – நிறைவுநாள்!

‘தினம் ஒரு புத்தக வெளியீடு’ – வெர்ச்சுவல் நிகழ்ச்சி – புத்தகக்காட்சி ஆரம்பித்த பிப்ரவரி 24, 2021 அன்று தொடங்கி புத்தகக்காட்சி நிறைவு நாளான  மார்ச் 9 வரை நடந்து முடிந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் புத்தகக்காட்சி நடைபெற்ற 14 நாட்களில் 14 புத்தகங்களை தினம் ஒரு நூலாக அமேசானில் வெளியிட்டேன்.

இந்த வெர்ச்சுவல் நிகழ்சியைப் பொருத்தவரை ஃபேஸ்புக்கும், காம்கேர் டிவி யு-டியூப் சேனலும்தான் நிகழ்ச்சி மேடை.

பொதுவாக விழா மேடைகளில் சிறப்பு விருந்தினர்கள் நிகழ்ச்சி மேடையில் நிகழ்ச்சி குறித்து பேசுவார்கள். இங்கு வெர்ச்சுவல் நிகழ்ச்சியில் நலன் விரும்பிகள், நட்புகள், வாசகர்கள் என பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். அந்த வகையில் நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று தங்கள் கருத்துக்களைப் பதிவிட்ட அன்பர்களின் கருத்துக்கள் தங்கள் அனைவரின் பார்வைக்கும்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்திய அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த அன்பு நன்றிகள். இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளியிட்ட 14 நூல்களையும் வாங்கிப் பயனடைந்த அத்தனை பேருக்கும் என் பணிவான வணக்கங்களும் நன்றிகளும்.

உயர்திரு. சவுந்தர்ராஜன் ரகோத்தமன்:

மருந்துக்குக் கூட தங்கள் எழுத்தில் எதிர் மறை எண்ணங்கள் இருந்ததில்லை.எப்போதும் பாஸிட்டிவ் ஆகவே இருக்கும். ‘இது தப்பு, இது சரி’ என்று நாசூக்காக வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று  ‘பொளேரென’ உணர்த்திவிடுவீர்கள். எந்த இடத்திலும் சுயத்தை இழக்காமல், உயரிய பண்புகளை சுட்டி காட்டி, இப்படி இருப்பது நல்ல பண்பு என்று தினமும் உணர்த்தி வருவதைத் தவறவிடாமல் படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டாலே போதும். தன்னம்பிக்கையும், உற்சாகமும் தானாக வந்து விடும். The day starts with your tonic words.

உயர்திரு. சங்கர நாராயணன் பாலசுப்ரமணியன் (சித்திரை சிங்கர்):

தொடர்ந்து 14 நாட்கள் தினம் ஒரு நூல் வெளியீடு என்பது ஒரு வியப்பான செயலாக தோன்றினாலும் அதன் பின்னணியில் உங்களின் கடின உழைப்பு

எனது மனதில் பதிக்கிறது. உங்கள் உழைப்பு போற்றத்தக்கது. பாராட்டுக்கள். என்றும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

உயர்திரு. சாந்தா தேவி:

தினம் ஒரு புத்தக வெளியீடு. வெர்ச்சுவல் நிகழ்ச்சி மூலம் வெளியீடு  மிகவும் சிறப்பாக சாதனையாக நடைப்பெற்று வருகிறது. தங்கள் முயற்சிகள், எளிதாக எளியவர்களுக்கு கணிணி அறிவை மேம்படுத்த உதவும் மிகப்பெரிய வரம்.  உங்கள் பதிவுகள் எப்போதும் நல்ல பாஸிட்டிவ் வைப்ரேஷன் தரக்கூடியவை. சோர்வு நேர்கையில் உங்கள் பதிவுகளைத்தான் படிக்கிறேன். நண்பர்களுக்கும் லிங்க் அனுப்புவேன். வாழ்த்துகள் மேடம்.

உயர்திரு. ராம்குமார்:

வாழ்வில் சில நேரங்களில் சிலரை இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்வது பெருமை என்பர். காம்கேர் மேடம் எழுதுவதை படிக்கிறோம், உற்சாக மனதோடு வலம் வருகிறோம். அதே சமயம் நமக்கு தோன்றும் புதிய எண்ணங்களை  சொன்னாலும் கேட்டுக்கொண்டு, ஏற்றுக் கொண்டு அதனை பதிவுகளில் எழுதி கருத்துச் சொன்ன அன்பரின் பெயரோடு வெளியிட்டு கௌரவிப்பார். ஆம். காம்கேர் புவனேஸ்வரி மேடம் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதில் பெருமையடைவோம்!

உயர்திரு. ஈஸ்வரமூர்த்தி நடராஜன்:

தினம்  ஒரு புத்தகம் வெளியிடு அருமையான நிகழ்ச்சி. இதயங்கனிந்த வாழ்த்துகள்.

உயர்திரு. செளந்தர மகாதேவன்:

வியக்க வைப்பவர். அவர்களின் நூல் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ் மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.

உயர்திரு. உதயபாபு:

விஐபியாக, இயக்குனராக, தொழிலதிபராக, எழுத்தாளராக, மென்பொருள்  நிறுவன சிஇஒவாக, பெற்றோர் போற்றும் மகளாக, எத்தனை எத்தனை அவதாரங்கள். எத்தனை சூழல் வந்தாலும் தளாராமல் அதிலிருந்து வெளியே வரும் கலையை கற்றுத்தந்த இரும்பு மனிஷிக்கு ஹட்ஸ் ஆஃப்.  உங்களது வழிகாட்டலில் பண்பட்டவர்கள் வெள்ளத்தில் சிறு துளியாய் நான். எத்தனை சோதனை வந்த போதும் நேர்மறை எண்ணங்களை தூண்டி நம்பிக்கை வளர்த்த எண்ணற்ற பதிவுகள், உங்க ‘அறிவரையில்’ உதித்த வார்த்தை ‘வைரங்கள்’ என்றும் ஒளியாய். தங்கள் தினம் ஒரு புத்தக வெளியீடு வெர்ச்சுவல் நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள் மேம்.

உயர்திரு. குமரன் கந்தசாமி:

தங்கள் தினம் ஒரு புத்தக வெளியீடு சிறக்க வாழ்த்துகள் மேடம்.

உயர்திரு. கணேஷ்பாபு:

பலரும் கற்ற கல்வியை காசுக்காக மட்டுமே பயன்படுத்துவதுடன் விட்டு விடுவதால் மற்றவர்களது நிலையை பட்டங்களை மட்டுமே மேலோட்டமாக பார்த்து முடிவு செய்கின்றார்கள். உங்களைப் பொருத்தவரை மேலும் மேலும் உங்கள் துறை சார்ந்த விசயங்களை கற்றுக்கொண்டே அதை வெற்றிகரமாக பயன்படுத்துவதுடன் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் விதைத்துக்கொன்டே பயணிக்கின்றீர்கள்.

உயர்திரு. சின்னசாமி சந்திரசேகரன்:

உங்களின் பதிவைப் படிக்கும்போது சத்குரு அவர்களின் உரையைக் கேட்பது போலவே இருந்தது.

உயர்திரு. ராமன் கோவிந்தன்:

வாழ்வியலில் தங்களின் கருத்துக்கள் அற்புதமானவை .Highly appreciable. Positive approach. தங்களின் கருத்துக்கள் ஒளி விளக்கு. தினம் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள்.

உயர்திரு. சிவபிரகாசம்:

உங்களின் 24×7×365 விழிப்புணர்வுத் தன்மை அசர வைக்கிறது! *Even little things teach us a lot but the chances are left with us to learn from them* என்பதை உங்கள் பதிவுகளில் நித்தம் எவ்வளவு அழகாக  விளக்கி வருகிறீர்கள்? தினம் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு வாழ்த்துரைத்த

உயர்திரு. மாசிலாமணி நந்தன்,
உயர்திரு. கே.எஸ்.சுரேஷ்குமார்,
உயர்திரு. முருகராஜ் லஷ்மணன்,
உயர்திரு. உமாமோகன்

ஆகியோருக்கும்,

இந்த நிகழ்ச்சியை பத்திரிகை செய்தியாக்கிய

‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கும், அதனை சாத்தியமாக்கிய உயர்திரு. அசோகன் அவர்களுக்கும்,
இந்தத் திட்டம் குறித்து சஞ்சிகை108 டாட் காம் இணைய இதழில் அறிமுகம் செய்து பேட்டி எடுத்து வெளியிட்ட உயர்திரு. வானமாமலை  அவர்களுக்கும்

என் நெஞ்சார்ந்த அன்பும், வணக்கங்களும், நன்றிகளும்.

தவிர நித்தம் என் பதிவுகளைப் படித்து வாழ்த்தும்

‘மிக நன்று. வாழ்த்துகள் மேடம்’ என்று மரியாதையுடன் வாழ்த்தும் உயர்திரு. சொக்கலிங்கம் பாலசுப்ரமணியன்,

‘Soooper Madam’ என  உற்சாக வாழ்த்துரைக்கும் உயர்திரு. சரோஜா ரகுநாதன்,

அவ்வப்பொழுது ’அருமை, அருமை.’ என பாராட்டு வாழ்த்துரைக்கும் உயர்திரு. கமலா முரளி,

சரியான நேரத்தில் வந்து உற்சாகப்படுத்தி வாழ்த்திடும் உயர்திரு. உமா மோகன்,

‘அருமை வாழ்க வளமுடன்’ என வாழ்த்தி மகிழும் வசுமதி சிவானந்தம்,

அவ்வப்பொழுது திடீர் விசிட் அடித்து ‘சான்ஸே இல்லை மேம்.’ என வாழ்த்திட்டு அழகான ஸ்மைலி போட்டு உற்சாகப்படுத்தும் உயர்திரு. கணேஷ் பாலா,

‘அருமை கம்ப்யூட்டர்ஜி’ என மரியாதையுடன் அழைத்து பாராட்டும் உயர்திரு. திருவட்டாறு சிந்துகுமார்,

‘தவமாய் எழுதுகிறீர்கள், வரமாய் கிடைக்கிறது’ என அழகு கவிதை வரிகளில் அவ்வப்பொழுது வாழ்த்தும் உயர்திரு. எம்.பி. உதயசூரியன்,

அவ்வப்பொழுது வந்து வித்தியாசமான கோணத்தில் சுருக்கமாக கருத்திடும் உயர்திரு. யோகேஸ்வரன் ராமநாதன்,

எப்போது ஃபேஸ்புக்குக்கு வந்தாலும் என் பதிவுகளைப் படித்து ‘அருமை மேடம்’ என கருத்திட்டு உற்சாகப்படுத்தும் உயர்திரு. சுட்டி கணேசன்,

தினந்தோறும் லைக் கமெண்ட்டெல்லாம் கிடையாது. ஆனால் ஒன்று செய்தால் அதை நிறைவாக செய்துவிட்டு அமைதியாகிவிடும் உயர்திரு. செங்கோட்டை ஸ்ரீராம் (சென்ற வருடம் நம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் #SheInspiresUs என்று பதிவிடச் செய்தபோது இவர்  என் திறன் குறித்தும் திறமை குறித்தும் உழைப்பு குறித்தும் உயர்வு குறித்தும் எழுதி பதிவிட்டு Compcare K Bhuvaneswari #SheInspiresUs என்று ஹேஷ் டேக் செய்து மகளிர்தின வாழ்த்தைப் பொதுவெளியில் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்),

எல்லா நாட்களிலும் லைக்கும் கமெண்ட்டும் இல்லை என்றாலும் என் எழுத்துக்களை உன்னிப்பாக கவனித்து நான் எத்தனை புத்தங்கள் எழுதி உள்ளேன் என்பது வரை தெரிந்து வைத்துக்கொண்டு என் அம்மாவின் பிறந்த நாள் பதிவை ஷேர் செய்து நான் 500-வது புத்தகத்தை என் அம்மா அப்பாவின் கைகளால் வெளியிட வேண்டும் என முன்னோட்டமிட்டு சட்டென அவர் பதிவை திரும்பிப் பார்க்க வைத்த உயர்திரு. ந.பா. சேதுராமன் சேது,

‘காஃபி வித் காம்கேர்’ –  காலையில் காபியுடன் காம்கேர் பதிவுகளையும் தவறாமல் படிப்பதாக சொல்லி பெருமைப்படுத்தும் வின்ஸி என்ற பெயரில் ஓவியங்கள் வரையும் உயர்திரு. குமரகுருபரன் ராமகிருஷ்ணன்,

‘வாவ்…’ என்று ஒற்றை வார்த்தையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் உயர்திரு. ஹரிசங்கர் கிருஷ்ணதுளசி,

‘நான் உங்கள்  Fan மேடம்’ என்று அவ்வப்பொழுது என் பதுவுகளுக்கு விசிட் செய்து உற்சாகப்படுத்தும்  உயர்திரு. ப்ரியா கிஷோர்

ஆகியோருக்கும் என் அன்பு நன்றிகள்.

என் பதிவுகளை நாள் தவறாமல் வாசித்தும், நேரம் கிடைக்கும்போது அவ்வப்பொழுது வாசித்தும் லைக்கிடும் அன்பர்கள்

(உயர்திரு) நல்லத்தம்பி, ரவிக்குமார் சம்பத்குமார், புவனேஸ்வரி முரளிதரன், சந்திரன் முனி, வி.ராஜாராமன், பால சுப்ரமணியன், மோகன் சேஷாத்திரி, கண்ணன் சரண்யா, விவேக் அருணாசலம், வெள்ளியங்கிரி சுப்ரமணியன், பானுகணேசன், ராஜ் சூர்யா, முருகேஷ் பாலகிருஷ்ணன், வெங்கட் ரமணி, ராமசந்திரன் சேதுரத்தினம், பாஸ்கரன் ஜெயராமன், பாஸ்கரன் ஜானகிராமன்,  பாலசபரேஸ்வரன், ஜெயபிரகாஷ், சம்பந்தன் வெங்கடேசன், ஜெயந்தி சுப்ரமணியன், ச. ராமசாமி, பத்மா சேகர், மது ஐயர், யோகா வாசு, ஜெயா சிங்காரவேலு, பவளமணி ஆனந்த முருகேசன், நெய்தல் இயற்கை அங்காடி,  பாலாஜி சந்ராம், பசியில்லா சங்கரன் கோயில் சங்கர், அருள்நிதி நட்டார்,  ஜீவாநாதன், ஆவுடையப்பன் ராஜேஸ்வரி, கோபி சரபோஜி, சிவகுமார் வேங்கடசாமி, எஸ்.ஆர்.டி (Srd), மகேந்திரன், வீரபுத்திரன், வீ.கே.கோபாலன், சிவானந்தம் வேல்முருகன், மரியா சிவானந்தம், மாரியப்பன், வேல்முருகன் ராமகிருஷ்ணன், தி. முருகன், நாகராஜ் நாகராஜன், அச்சரப்பாக்கம் ராம்நாராயணன், ரமேஷ் கோபால், ஹரிகரன் விஸ்வநாதன், பிரச்சனா,  கோவிந்தராஜன், வெங்கடசேஷன் சங்கர், தேம்பவானி எலியாஸ், ரெஜினா மேரி, பனசை நடராஜன், ஹெச்.வி. கிருஷ்ணப்பிரசாத், சுரேஷ்பாபு கிருபா, ரேணுகா தேவி, பசும்பொன், திருநாகேஸ்வரன், ஸ்ரீபாலா ஜோதிடம், ஸ்ரீ  ஏ. பி. இருங்கோவேல், சசிரேகா பாலசுப்ரமணியன், ப்ரவீண்குமார், முரளி முத்துவேலு, முரளி சவுந்தரராஜன், கிளிக் ரவி, ரவி சுப்ரமணியம், குணராஜ்,  சுந்தர கந்தசாமி, சிவா, திருப்புல்லாணி ரகுவீரதயாள், திருமலைக் குமாரஸ்வாமி, சடகோபன் நாராயணன், ராஜா பார்த்திபன், சபரி சேது

அனைவருக்கும் என் அன்பு நன்றிகளும், வணக்கங்களும்.

(விடுபட்டவர்கள் மன்னிக்கவும். கவனமாகவே பெயர்களை எழுதியுள்ளேன்)

வாசகர்களாகிய உங்கள் அனைவரின் பேரன்புடன் என் தொழில்நுட்பப் பயணத்தில் எழுத்துப் பயணத்தையும் இணைத்துக்கொண்டு தொடர்கிறேன்.

என் எழுத்தை வாசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அன்பு நன்றிகள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP
#காம்கேர்_புத்தகம் #compcare_book
#Daily_a_Book_Release_Virtual_Event

(Visited 41 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon