#கவிதை: நீங்களும் பாக்கியசாலியே!

நான் பாக்கியசாலி! அப்போ நீங்கள்?

விரும்பியது கிடைத்தால் மகிழ்ச்சி…
கிடைக்காவிட்டால் துக்கம்…
விரும்பியதற்கு மாறாக
கொஞ்சம் அதிகப்படியாகக் கிடைத்தாலும் சலிப்பு!

என்னதான் வேண்டும் மனிதனுக்கு?

அவனுக்கு
அவன் நினைத்தது
நினைத்தபடி நடக்க வேண்டும்…

இல்லை என்றால்

சுயபச்சாதாபம், கழிவிறக்கம்,
பொறாமை இத்யாதி இத்யாதி!

மனித மனம் விசித்திரமானது,
வென்றெடுப்பவர்கள் பாக்கியசாலிகள்!

காம்கேர் கே.புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 8, 2021

#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai

(Visited 108 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon