
தினமலர்: அம்மாவின் வாசிப்பும் நேசிப்பும்! (January 25, 2014)
பத்மாவதியின் வாசிப்பும்,நேசிப்பும்! நேர்காணல் செய்தவர்: எல்.முருகராஜ் தினமலர் வெப்சைட்டில் வாசிக்க: http://www.dinamalar.com/news_detail.asp?id=903120 எழு நூறு அரங்குகள் ஐந்து லட்சம் தலைப்புகள் பத்து லட்சம் பார்வையாளர்கள் இருபது லட்சம் வாசகர்கள் லட்சக்கணக்கில் புத்தகங்கள் கோடிக்கணக்கில் விற்பனை என்று சென்னையின் 37வது புத்தகதிருவிழா விமரிசையாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த வெற்றி, புத்தகத்தை படிக்கும் மக்கள் இன்னமும் குறைவின்றி இருக்கிறார்கள்…

Vocational Excellence Award – Rotary Club of Madras Chenna PATNA (January 23, 2014)
கம்ப்யூட்டர் நம் நாட்டில் நடை பயிலத் தொடங்கும் முன்னரே, கம்ப்யூட்டர் சயின்ஸில் இரட்டைப் பட்டம் பெற்றதுடன் (எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்) கூடுதலாக எம்.பி.ஏவும் படித்து, வெளிநாட்டு வாய்ப்புகள் சிவப்புக் கம்பளம் போட்டு அழைத்தாலும் அதை அத்தனையும் உதறித் தள்ளிவிட்டு, இந்தியாவிலேயே முதன் முதலில் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய முதல் பெண் தொழில்நுட்ப வல்லுநர் என்ற அங்கீகாரத்தைப்…

தினமலர்: நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள் (October 22, 2013)
தினமலர் ஆன்லைனில் வெளியான நேர்காணல்! நேர்காணல் செய்தவர்: எல். முருகராஜ், தினமலர் வெப்சைட்டில் வாசிக்க: Dinamalar OCT 22, 2013 நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள்! திருப்பூர் சின்னக்கரையில் உள்ள பார்க்ஸ் கல்லூரியின் அரங்கம் மாணவ, மாணவியரால் நிரம்பியிருந்தது. அமர்ந்திருந்த மாணவ, மாணவியர் ஒரு அற்புதமான பெண்மணியின் பேச்சைக் கேட்கப் போகும் ஆர்வத்துடனும், அமைதியுடனும் இருந்தனர். அவர்கள்…

Best Book Award – பவித்ரம்:Pavithram – Ramamoorthi Memorial Trust (July 21, 2013)
பவித்ரம் அமைப்பின் சார்பாக, ராமமூர்த்தி நினைவு அறக்கட்டளை வாயிலாக 2013 -ன் சிறந்த புத்தகமாக காம்கேர் கே. புவனேஸ்வரி எழுதிய ‘கம்ப்யூட்டரில் தமிழ்’ நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு சிறந்த நூலாசிரியர் விருதும், அவர் எழுதிய ‘கம்ப்யூட்டரில் தமிழ்’ நூலுக்கு சிறந்த புத்தக விருதும் (Best Book Award) ஜூலை 21, 2013 அன்று வழங்கப்பட்டது.

கணித்தமிழ் வல்லுநர் விருது – By தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை (March 4, 2013)
சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்த்துறை ஏற்பாடு செய்திருந்த ‘பார்வையற்றோருக்கான தமிழ்க் கணினி மேம்பாட்டுத் திட்டம்’ 04-03-2013 அன்று சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு கணித்தமிழ் வல்லுநர் விருது வழங்கப்பட்டது. சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் டாக்டர் ஆர். ஜெயசந்திரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பார்வையற்றோருக்கான தமிழ்க் கணினி மேம்பாட்டுத்…

கணினிக் கலைவாணி, பல்கலைச் செல்வி – புதுக்கோட்டை இலக்கியப் பேரவை (Decdember 23, 2012)
காம்கேர் கே. புவனேஸ்வரியின் 20 வருட கணினித் தொழில்நுட்பத் துறைப் பணியைப் பாராட்டி புதுக்கோட்டை இலக்கியப் பேரவை, புதுக்கோட்டையில், 23-12-2012, ஞாயிறு அன்று ‘கணினிக் கலைவாணி, பல்கலைச் செல்வி’ என்ற இரண்டு பட்டங்களை வழங்கி கெளரவித்தது. மேலும் இதன் தலைவர் திரு. முத்து சீனிவாசன் அவர்கள் நந்தவனப் பூக்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகத்தில் விருது…

தினகரன் ஆன்மிகபலன்! புதுமை கோணத்தில் ஆன்மிக சொற்பொழிவு…(Oct 2010)
திரு. பரணிகுமார்… கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இனிய நினைவலைகளில்… பூஜைகளும் ஹோமங்களும் செய்து ஆன்மிகத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டுவரும் தினகரனில் பணிபுரியும் திரு. பரணிகுமார் அவர்களுடன் ஒரு பூஜைக்கான நிகழ்ச்சிக்காக இன்று போனில் பேசினேன். மனதுக்குப் பிடித்த சேவை அதே துறையில் பணி இரண்டும் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அந்த வகையில் இவரும். பத்திரிகை, தொலைக்காட்சி…

கணினி மேதை – பருத்தியூர் சந்தானராமன், ஹேமா சந்தானராமன் (April 2010)
இலக்கிய மேடைப் பேச்சாளர்கள் பருத்தியூர் கே.சந்தானராமன் மற்றும் அவரது துணைவியார் திருமிகு. ஹேமா சந்தானராமன் அவர்களால் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு, அவரது கம்ப்யூட்டர் தொழில்நுட்பத் துறை சாதனையைப் பாராட்டி ‘கணினி மேதை’ விருது ஏப்ரல் 2010 அன்று அளிக்கப்பட்டது. விரிவாக படிக்க Kalaimagal APRIL 2010

தென்றல்: பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா! (March 2010)
‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!’ தென்றல் பத்திரிகையில் வாசிக்க: Thendral Issue March 2010 விமானத்தில்! 2010 – ல் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிக்கொண்டிருக்கும் விமானத்தில் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகையான தென்றல் மார்ச் மகளிர் சிறப்பிதழும் என் சீட்டின் முன்னே வைக்கப்பட்டிருந்த ஆங்கிலப் பத்திரிகைகளுடன் இருந்தது. அந்த தென்றல் பத்திரிகையில் என் குறித்த…

தினமணி: பன்முகப் பெண்மணி! (May 24, 2009)
தினமணி மகளிர்மணியில்! நேர்காணல் செய்தவர்: ஜெயந்தி நாகராஜன் தினமணி வெப்சைட்டில் வாசிக்க: Dinamani May 24, 2009 தினமணி செய்தித்தாளில் வாசிக்க: Dinamani Sunday Kondattam May 24, 2009 பன்முகப் பெண்மணி! டெல்லி கணேஷ் என்றும் பாம்பே ஜெயஸ்ரீ என்றும் சிலர் தம் பெயரின் முன்னால் தங்கள் ஊரின் பெயரை அடையாளம் ஆக்கிக் கொள்வார்கள்….