தமிழில் சுருக்கமாக

காம்கேர் கே.புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்
Since 1992

‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற ஐ.டி நிறுவனத்தின் CEO, தொழில்நுட்ப வல்லுநர், Ai ஆராய்ச்சியாளர், கிரியேடிவ் டைரக்டர், ஆவணப்பட இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தை 1992 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக இயக்கி வருகிறார்.

தன் நிறுவனத்தின் மூலம் தான் பெறுகின்ற தொழில்நுட்ப அனுபவங்களை அந்தந்த காலகட்டத்திலேயே புத்தகங்களாக எழுதி பதிவு செய்து வருவது இவரது சிறப்பு.  இதுவரை 250  புத்தகங்கள் எழுதி இருப்பது இவரது சாதனை. அதில் 200 புத்தகங்கள் தொழில்நுட்பத்துக்காகவே என்பது ஹைலைட்.

இவர் எழுதிய பல புத்தகங்கள் தமிழகம், இந்தியா மட்டுமில்லாமல் உலகளாவிய பல பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக இடம்பெற்றிருப்பதும், நூலகங்களை அலங்கரித்திருப்பதும் இவரது தொழில்நுட்ப பயணத்திற்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம்.

இவர் எழுதிய புத்தகங்கள் மட்டுமில்லாது, இவர் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் அனிமேஷன் உட்பட அனைத்துத் தயாரிப்புகளும் உலகளாவிய அங்கீகாரம் பெற்றவை.

‘காம்கேர் சாஃப்ட்வேர்’ – நிறுவனத்தின் சிறப்பு!

1992 – இந்தியாவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அறிமுகம் ஆகத் தொடங்கிய காலகட்டம்; மென்பொருள் நிறுவனங்கள் மிகமிகக் குறைவு. அந்த காலகட்டத்தில் தொழில்நுட்பத்தில் இரட்டைப் பட்டம் பெற்று, சுயமாக சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கியதால் ‘நம் நாட்டில் மென்பொருள் நிறுவனம் தொடங்கிய முதல் பெண் தொழில்நுட்ப வல்லுநர்’ என்ற சிறப்பையும் அங்கீகாரத்தையும் பெற்றார்.

அந்த காலகட்டத்திலேயே தமிழையும் கம்ப்யூட்டரையும் இணைத்து, சாஃப்ட்வேர்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றிபெற்றதால், ‘தமிழையும் கம்ப்யூட்டரையும் இணைத்த தொழில்நுட்ப வல்லுநர்களுள் மிக முக்கியமானவர்’ என்ற பாராட்டையும், அங்கீகாரத்தையும் மட்டுமில்லாமல்  அதற்கான விருதுகளையும் பல தரப்பில் இருந்தும் பெற்ற சிறப்புக்குரியவர்.

‘காம்கேர் சாஃப்ட்வேர்’ – நிறுவனத்தின் செயல்பாடுகள்!

இவரது நிறுவனத்தில் சாஃப்ட்வேர்கள் தயாரித்தல், வெப்சைட்டுகளை வடிவமைத்தல், மல்டிமீடியா அனிமேஷன் சி.டி-கள் தயாரித்தல், மொபைல் ஆப்களை வடிவமைத்தல், இ-புத்தகங்களை  வெளியிடுதல், ஆவணப்படங்கள் தயாரித்தல் போன்ற பணிகள் நடைபெற்றுவருகின்றன.

நம் பாரத நாட்டுக்காகவே சாஃப்ட்வேர்கள் தயாரிப்பதை முதன்மை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டுவருவது இவரது நிறுவனத்தின் பெரும் சிறப்பு. அயல்நாடுகளுக்குச் சென்றாலும் இவர் தனது நிறுவன சாஃப்ட்வேர் தயாரிப்புகளை அங்கு கொண்டு சென்று அங்குள்ளோரிடம் பரவலாக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய புத்தகங்கள்!

கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் தொழில்நுட்பம் சார்ந்த சாஃப்ட்வேர், ஹார்டுவேர், இன்டர்நெட், மொபைல் ஆப்ஸ் குறித்து 125-க்கும் மேற்பட்ட நூல்களையும், வாழ்வியலுக்காக 25-க்கும் மேற்பட்ட நூல்களையும்  எழுதியுள்ளார்.

பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற எழுத்தும், தொழில்நுட்ப அறிவும்!

இவர் ஆங்கிலத்தில் எழுதிய பல தொழில்நுட்ப  நூல்கள் கல்லூரி மாணவர்களிடையே பிரசித்தம். இவர்  எழுதிய  ‘ஃபோட்டோஷாப்’புத்தகத்தைப் பாராட்டி அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து கடிதம் வந்தது பெருஞ்சிறப்பு. சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ் நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என பல்வேறு பல்கலைக்கழகங்களில் இவர் எழுதிய தொழில்நுட்பப் புத்தகங்கள் ஆய்வு நூல்களாகவும், சமூக  செயல்பாடுகளுக்கு உதவும் நிகழ்ச்சிகளுக்கான பாடதிட்டமாகவும் உள்ளன.

இவர் தமிழில் எழுதிய அத்தனை தொழில்நுட்பப் புத்தகங்களும் மாணவர்களுக்கிடையே மட்டுமில்லாது  நம் தமிழக மக்களிடையேயும் மிகவும் பிரசித்தம்.

இவரது  நிறுவனம் தயாரித்துள்ள  சாஃப்ட்வேர் தயாரிப்புகள், ஆவணப்படங்கள்-அனிமேஷன்-இகன்டன்ட்-ஆடியோ வீடியோ படைப்புகளும்  பாடதிட்டமாக இடம்பெற்றுள்ளன. அவற்றை ஆதாரமாகக் கொண்டு ஆராய்ச்சிகள் செய்து  Ph.D பட்டம் பெற்றவர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக சைபர் க்ரைம் குறித்து இவர் எழுதி விகடன் வாயிலாக வெளியான  ‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’என்ற புத்தகம்  சைபர் குற்றங்களும் தீர்வுகளும் என்ற ஆராய்ச்சிக்கும், இவர்  எழுதி மணிவாசகர் பதிப்பகம் வாயிலாக வெளியான   ‘டிஜிட்டல் நூலகம்’ என்ற புத்தகம் நூலகத்துறை சார்ந்த ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம்,  இந்தியா மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேஷியா,  ஸ்ரீலங்கா, மாஸ்கோ போன்ற நாடுகளிலுள்ள  நூலகங்களில் இவரது  புத்தகங்கள் இடம்பெற்று வாசகர்களுக்கிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

உலகளாவிய அங்கீகாரம் பெற்ற சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகள்!

இவரது நிறுவனத்தின் சாஃப்ட்வேர்  மற்றும் அனிமேஷன் தயாரிப்புகள் பாரதம் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் பல பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நிர்வாக செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பல முறை அமெரிக்கா சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பம் மற்றும் கல்வி சார்ந்த பிராஜெக்ட்டுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். அங்கு தயாரித்த ‘உயர்கல்வியில் இந்திய கல்விமுறைக்கும் அமெரிக்க கல்விமுறைக்குமான ஒப்பீடு’ என்ற ஆவணப்படம் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் பல பள்ளிகளிலும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும்  நடைபெறும் கருத்தரங்களில் உரையாடி மாணவர்களுக்கான ஊக்கசக்தியாகவும் இருந்துவருகிறார்.

இவற்றின் மூலம் கிடைத்த அனுபவத்தில், மாறிவரும் பொருளாதாரக் கொள்கைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், கலாசாரப் பரிமாற்றங்கள் எப்படியெல்லாம் நம் வாழ்க்கைமுறையைப் பாதிக்கின்றன, அவற்றில் எவை  மேம்பாட்டுக்குரிய திருப்பங்கள், எவை திணிப்புகள் என்பதை கூர்ந்து கவனித்து வருபவர்.

12 வயதில் ஆரம்பித்த எழுத்து!  

கம்ப்யூட்டர் தவிர, குழந்தைகள், பக்தி, இலக்கியம், ஆன்மிகம், மனிதவள மேம்பாடு பற்றிப் பல முன்னணிப் பத்திரிகைகளில் எழுதிவருகிறார். அவை சம்மந்தப்பட்ட சுயமுன்னேற்றப் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டு வருகிறார்.  12-வயதில் இருந்தே எழுதத் தொடங்கியவர்.

வேலை மற்றும் தொழில் வாய்ப்பு!

தன் நிறுவனத்தின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பையும், தான் நடத்தும் தொழில்நுட்பக் கருத்தரங்குகள் மூலம் ஏராளமான தொழில் முனைவோர்களை உருவாக்கி வருகிறார்.

தன் நிறுவனத்தின் மூலம் தான் தயாரித்து வெளியிட்டு வரும் சாஃப்ட்வேர், ஆடியோ, வீடியோ, மல்டிமீடியா தயாரிப்புகள் மூலமும்…

தங்கள் காம்கேர் டிவி வழியாக யு-டியூப் நிகழ்ச்சிகள் மூலமும்…

தொடர்ச்சியாக கடந்த 29 வருடங்களாக அந்தந்த காலகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை தன் நிறுவன சாஃப்ட்வேர் தயாரிப்புகள் மூலம் இணைத்து  தான் எழுதி வெளியிடும் தொழில்நுட்பப் புத்தகங்களின் மூலமும்…

இலட்சக்கணக்கான இளைஞர்களை தொழில்நுட்பத்துறையின் பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்தச் செய்து அதன் மூலம் வேலை வாய்ப்புகளையும், தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுத்து வருகிறார்.

சமுதாயப் பணியில்…

தன் பெற்றோரின் பெயரில் ‘ஸ்ரீபத்மகிருஷ்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக உதவிவரும் இந்த அமைப்பின் வாயிலாக சூழலுக்கு ஏற்ப பல்வேறுதரப்பு மக்களுக்கும் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தரப்பினரில் (பெற்றோர், ஆசிரியர், ஓவியர்கள், எழுத்தாளர்கள் Etc.,) திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து ‘ஸ்ரீபத்மகிருஷ்’விருதளித்தும் கெளரவிக்கிறார்.

விரிவான தகவல்களுக்கான லிங்குகள்:

காம்கேர் புவனேஸ்வரியின் நேர்காணல்களின் தொகுப்பு 1992 -ம் ஆண்டில் இருந்து…

காம்கேர் புவனேஸ்வரியின் நேர்காணல்கள் சுடச் சுட!

சிறுகதைகள் – 100 க்கும் மேல்

கட்டுரைகள் – 3000 க்கும் மேல்

தொடர்கள் – 100 க்கு மேல்

புத்தகங்கள் – 250 க்கும் மேல்

பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற அனிமேஷன் படைப்புகளும், நூல்களும்!

பத்திரிகையாளராக  வடிவமைத்து வெளிவந்த மாத இதழ் – 1 (மூன்று வருடங்கள் ஒவ்வொரு மாதமும்)

ஆசிரியர் குழு பொறுப்பில் உள்ள அச்சு புத்தகங்களும், மின்னிதழ்களும் – 4

பேச்சாளராக பங்கேற்ற நிகழ்ச்சிகள் – 100 க்கும் மேல்

அனிமேஷன் கார்ட்டூன் படைப்புகள்  தயாரிப்பாளராக – 200 படைப்புகளுக்கும் மேல்

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராக – 1000 படைப்புகளுக்கும் மேல்

தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் ஆவணப்பட கிரியேடிவ் டைரக்டராக – 500 படைப்புகளுக்கும் மேல்

(Visited 495 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon