
பல்கலைக்கழகங்களில் காம்கேர் தயாரிப்புகள்
சென்னை பல்கலைக்கழகம்… அண்ணா பல்கலைக்கழகம்… பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்… மைசூர் பல்கலைக்கழகம்… கடந்த 25 வருடங்களில் இந்தப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பல கல்லூரிகளில் பாடதிட்டமாகவும், சமூக செயல்பாடுகளுக்கு உதவும் நிகழ்ச்சிகளுக்கான பாடதிட்டமாகவும்… நான் எழுதிய தொழில்நுட்பப் புத்தகங்களும்… எங்கள் நிறுவனம் தயாரித்துள்ள சாஃப்ட்வேர் தயாரிப்புகள், ஆவணப்படங்கள்-அனிமேஷன்-இ.கன்டன்ட்-ஆடியோ வீடியோ படைப்புகள் இடம்பெற்று வருவதைத் தொடர்ந்து… இந்த வருடத்தில் (2019) மேலும்…

‘பேரன்பு’ – திரை விமர்சனம்
‘பேரன்பு’ – ‘வாழ்க்கையில் நாம் எத்தனைக் கொடுத்து வைத்தவர்கள்’ என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வைக்கிற திரைப்படம். வாழ்க்கையும் இயற்கையும்… வெறுப்பானது அதிசயத்தக்கது கொடூரமானது அற்புதமானது புதிரானது ஆபத்தானது சுதந்திரமானது இரக்கமற்றது தாகமானது விதிகளற்றது முடிவற்றது பேரன்பானது என 12 அத்தியாயங்கள். மூளைமுடக்குவாத நோயில் மகள், பிரிந்து சென்ற மனைவி, இயற்கை சூழலில் தனிமையான வீட்டில்…

சப்ளை… டிமாண்ட் (ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பிப்ரவரி 2019)
திறமையைப் பட்டைத் தீட்டுங்கள் என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகத்தில் வெளியான கட்டுரை இது. முதலில் எங்கள் காம்கேர் பப்ளிகேஷன் மூலம் வெளியிட்டோம். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இந்தப் புத்தகம் NCBH – நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகம் மூலம் வெளிவர ஆரம்பித்தது. சுயதொழிலில் வெற்றிபெற ஓர் உத்தியை கதை மூலம் விளக்கி…

புத்தகங்களின் ‘ரீச்சும்’, எழுத்தின் ‘வீச்சும்’!
இன்று காலையிலேயே ஒரு வித்தியாசமான அனுபவம். அரசாங்கத்தில் உயரிய பதவியில் இருக்கும் ஒருவர் போன் செய்திருந்தார். ‘உங்கள் புத்தகங்களை படித்திருக்கிறேன். எங்கள் அலுவலக ஸ்டாஃப்களுக்கு வகுப்பெடுக்க பயன்படுத்தி வருகிறோம்….’ நான் உற்சாகமாகி ‘அப்படியா… என்ன புத்தகம்…’ என்றேன். ‘நீங்கள் எழுத ஆரம்பித்த 1995-களில் இருந்தே உங்கள் புத்தகங்களைத்தான் எங்கள் ஸ்டாஃப்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளுக்குப் பயன்படுத்துகிறோம்…’ என்று…

சூழல் காட்டும் திறமை
திறமையும் ஆர்வமும் வெவ்வேறு. திறமை என்பது நம்மிடம் இருந்து ஏதேனும் வடிவத்தில் வெளிப்படக் கூடியது. ஆர்வம் என்பது ஏதேனும் ஒரு விஷயத்தின்பால் கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாடு. முன்னதை கொஞ்சம் பிரயத்தனப்பட்டால் வளர்த்துக்கொள்ள முடியும். பின்னதை அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில் ஈடுபாடு இருக்கும் துறை அத்தனையிலும் நமக்குத் திறமை இருக்க வேண்டும் என்பதில்லை. மேலும் திறமை…

Hats off to Charukesi Sir…
சில ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் காம்கேர் மூலம் நான் நடத்தி வரும் ஆங்கில ஜர்னல் (English Journal) ஒன்றுக்கு ஆர்டிகல் கேட்டு திரு. சாருகேசி அவர்களை தொடர்புகொண்டேன். அடுத்த இரண்டு நாட்களில் ஆர்டிகல் வேர்ட் ஃபைலாகவும், பி.டி.எஃப். ஆகவும் என் இமெயிலில். ‘பேமெண்ட் குறித்து அவரிடம் கேட்டதற்கு நான் என் எழுத்தை நானாக காசு கேட்டு…

’பாரத மாதா’ என் மனதுக்குள்ளும் கம்பீரமாய்…
ஜனவரி 30 முதல் பிப்ரவரி 4 வரை சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெறும் இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் பாரத மாதா ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்களின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் மற்றும் வின் தொலைக்காட்சி சார்பில் அமைக்கப்பட்ட இந்த பாரத மாதா ஆலயத்தை 2019 ஜனவரி…

உண்மையான கலைக்கும், கலைஞனுக்கும் எப்போதும் அழிவில்லை
ஞாயிறு அன்று ‘அமேசான் ப்ரைமில்’ விஜய் சேதுபதியின் நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‘சீதக்காதி’ திரைப்படம் பார்த்தேன். ஆரம்ப நாடகக் காட்சிகள் கொஞ்சம் போரடித்ததால் ‘ஆஃப்’ செய்து விடலாம் என்றுகூட தோன்றியது. ஆனாலும் ‘என்னதான் சொல்லி இருக்கிறார்கள்’ என்ற ஆர்வத்தில் பார்க்க ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல படம் சுவாரஸ்யமாக நகர…

நம் சுயத்தையே மற்றவர்களும் உணரும்போது…
ஜனவரி 21, 2019 அன்று வின் டிவியில் என்னுடைய நேர்காணல் ஒளிபரப்பானதை ஃபேஸ்புக், டிவிட்டர் முதலான சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தேன். டிவியில் பார்க்க முடியாதவர்களுக்காக யு-டியூப் லிங்கையும் கொடுத்திருந்தேன். வீடியோவை பார்த்துவிட்டு நேற்று… மீடியாதுறையில் மிகமிக நேர்மையாக தங்கள் பணியிலும் வாழ்க்கையிலும் சிறப்பாக வாழ்ந்துவரும் திரு. சேது நாகராஜன் மற்றும் திரு. முருகராஜ் இருவரும் எனக்கு தங்கள்…

சர்வேஷின் கதைகள்
திரு. சத்யா GP எழுதி ‘நண்பர்கள் பதிப்பகம்’ வாயிலாக வெளிவந்திருக்கும் ‘சர்வேஷின் கதைகள்’ புத்தகத்தை இன்று வாசித்தேன். யாரேனும் ஒரு பரிசு கொடுத்தால் அதைப் பயன்படுத்த வேண்டும், நாம் அதற்குக்கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் கவனத்துக்குக் கொண்டு சென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கொள்கை. இன்றளவும் பெரும்பாலும் பின்பற்றி வருகிறேன். புத்தகம் பரிசாக வந்தால்……