‘Comp’care நிறுவனமா அல்லது  ‘Calm’care நிறுவனமா?

மயிலவேலன் – வனிதா பதிப்பகத்தின் உரிமையாளரும், பாபாசியின் Vice President என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால், இவரது தாய் ஒரு பெண் சாதனையாளர், தன்னம்பிக்கைப் பெண்மணி என்ற விஷயம் தெரியுமா? இவரது தாய் திருமிகு. அம்சவேணி பெரியண்ணன் அவர்கள் பதிப்பகத் துறையில் முதல் பெண்மணி என்னும் மகுடம் தரித்தவர். அது மட்டுமில்லாமல் 1000 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்…

வானம் கூட எல்லை இல்லை!

ரொம்ப வருடங்களாக  என்னை சந்திக்க வேண்டும் என் தொழில்நுட்ப அனுபவங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டே இருந்தவர் நேற்று திரும்பவும் எனக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி இருந்தார். ‘தொந்திரவுக்கு மன்னிக்கவும்… உங்களை சந்திக்க வேண்டும்…’ என்றவருக்கு ’என்ன விஷயம்… ஏதேனும் தொழில்நுட்ப உதவி வேண்டுமா… போனிலேயே பேசலாமே…’ என்று குறிப்பிட்ட நேரம் கொடுத்துப்…

குரு தட்சணை

  நேற்று ஒரு புது சாஃப்ட்வேர் இம்ப்ளிமெண்ட் செய்தோம். மாற்றுத்திறனாளிகளுக்குப் பயன்படும் வகையில் நாங்கள் தயாரித்துள்ள அது குறித்த தகவல் விரைவில். மூன்றுமாத உழைப்பு. பொதுவாக பிராஜெக்ட் தொடக்கத்தில் காம்கேரில் உள்ள நம்பிக்கை பிள்ளையாருக்கு பூஜை செய்து ஆரம்பிப்போம். முடித்து இம்ப்ளிமெண்ட் செய்த பிறகும் அப்படியே. இந்த முறை நாங்கள் முதன் முதலில் காம்கேர் நிறுவனம்…

பஞ்சு மிட்டாய் டாட் காமில்… கோகுலம் சொல்லும் செய்தி! (செப் 24, 2018)

கோகுலம் – சிறுவர் இதழ் அக்டோபர் 2018 இதழுடன் நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து மனதுக்குள் இனம்புரியாத வலி. என் எழுத்துக்கும், நம்பிக்கைக்கும், திறமைக்கும் விதை போட்டதே கோகுலம் இதழ்தான். 1982 – ஆம் ஆண்டு கோகுலத்தில் வெளியான நான் எழுதிய  ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சிறுகதையே பிரசுரத்துக்கு ஏற்றதாக தேர்ந்தெடுக்கப்பட்ட…

சமூக வலைதளங்களில் பெண்கள் அடிமையாகிறார்களா? (தினமலர் செப் 23, 2018)

பெண்கள் ஏன் ஸ்மார்ட் போன் மற்றும் சமூக வலைதளங்களில் அடிமை ஆகிறார்கள்? வீட்டில் கணவன் குழந்தைகள் என வட்டத்துக்குள் தாங்கள் எதிர்பார்த்த அன்பும் அன்யோன்யமும் கிடைக்காத சூழலில் அது ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் கிடைக்கும்போது தங்களையும் அறியாமல் அதற்கு முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு அடிமையாகவே ஆகிவிடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். தான் எத்தனை…

பாரதியை எனக்கு ஏன் பிடிக்கும் தெரியுமா? (ஹிந்து மித்திரன் அக்டோபர் 15-31, 2018)

பாரதியார் பெண் விடுதலை, பெண் முன்னேற்றம் போன்றவற்றுக்காகக் குரல் கொடுத்ததும் நிறைய கவிதைகள் எழுதியதும் நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அவருடைய இந்த உத்வேகத்துக்குப் பின்னணியில் இருந்தவரும் ஒரு பெண்மணியே. அவர் சகோதரி நிவேதிதை. மகாகவி பாரதியார்  இவரைத் தமது குருவாகக் குறிப்பிடுகிறார்.  ஒரு முறை, பாரதியார் சகோதரி நிவேதிதாவை சந்தித்தபோது,  அவரது மனைவியை அழைத்து…

ஆஃபீஸ் டைம்

சுமார் 15 வருடங்களுக்கு முன் காம்கேரில் எனக்கு பர்சனல் அசிஸ்டெண்டாகப் பணிபுரிந்த ஹரி என்பவர் இன்று என்னை நேரில் சந்திக்க வந்திருந்தார். துபாயில் பணிபுரிந்துவிட்டு இப்போது சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதாகச் சொன்னார். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரையும்  நினைவில் வைத்திருக்க ஒரு Tag வைத்திருப்போம். அதுபோல இன்று சந்திக்க வந்திருந்த ஹரிக்கு என் மனதில்…

‘யு டர்ன்’

‘யு டர்ன்’ – நாயகியின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படம். த்ரில்லர்  ரகத் திரைக்கதையை  ஒரு சமூகப் பொறுப்புணர்வுடன் இயக்கி விழிப்புணர்வை கொடுக்க முடியுமா எனவும் வியக்க வைத்தது. தினந்தோறும் சாலைவிதிகளை மீறி சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் ஒருசில நபர்களால், அதற்கு சம்மந்தமே இல்லாத பயணிகள் விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள். இதனைத் தடுக்க ‘சாலை…

வாழ்க்கையின் OTP – 1 (புதிய தலைமுறை – பெண் ஆகஸ்ட் 2018)

OTP – இன்று இந்த வார்த்தையை தெரியாதவர் யாரும் உண்டோ? வங்கி பணப் பரிவர்த்தனை செய்வது முதல் வாடகை கார் புக்கிங் வரை அனைத்தின் இயக்கமும் இந்த வார்த்தையின் அஸ்திரத்தில்தானே… நம் வங்கி அக்கவுண்ட்தான், நாம் பணம் செலுத்தி பயணம் செய்யும் கார்தான்… ஆனாலும் அவர்கள் அனுப்பும் OTP பாஸ்வேர்ட் மூலம்தான் அவர்கள் சேவையை அனுபவிக்க…

விதை பிள்ளையார் (செப் 8, 2018)

பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு சேவாலயாவின் சேவை! பிள்ளையார் சதுர்த்திக்கு சேவாலயா செயல்படுத்தியுள்ள விதைப் பிள்ளையார் தான் இந்த வருடத்திய ஹைலைட். நீர் மாசுபடுவதைத் தவிர்த்து பசுமையைப் பெருக்கும் விதமாக சென்னையை அடுத்த பாக்கம் என்ற இடத்துக்கு அருகில் உள்ள கசுவா என்ற கிராமத்தில் விதைகளை வைத்து விநாயகர் சிலைகளை தயாரிக்கிறார்கள். சுத்தமான களிமண், காய்கறி விதைகள்,…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon