
‘கோடு’ ஓவியக்கூடம்!
‘கோடு’ ஓவியக்கூடம்! ஓவியத்துக்கு மிக நெருக்கமான பெயர். வேளச்சேரி 100 அடி ரோடில் அண்மையில் திறந்துள்ளார் திரு. சீராளன் ஜெயந்தன். இன்று இந்த ஓவியப் பள்ளிக்கு நேரில் சென்றிருந்தேன். பல்வேறு ஓவியர்களின் கைவண்ணத்தில் ஓவியங்களை காட்சிப்படுத்திய கண்காட்சியுடன் தொடங்கியுள்ளார். ஓவியக்கூடம் கலைநயத்துடன் பல்வேறு வண்ணக்கலவைகளால் சரஸ்வதி கடாக்ஷத்துடன் காட்சியளிக்கிறது. பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் பழகுவதற்கும் எளிமையான மனிதராக…

மனோ தைரியம்!
சரியானதை யோசிப்பவர்… தனக்குப் பிடித்த வேலையை செய்பவர்… தன் மனசாட்சிக்கு சரியெனப்படுவதை பேசுபவர்… மாயவரத்தான் கி ராமேஷ்குமார்… இவரும் என் சகோதரனும் பி.எஸ்.ஸி படித்தபோது நான் எம்.எஸ்.ஸி முதலாம் ஆண்டில்… நாங்கள் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி மாணவர்கள்! என் சகோதரன் வயதை ஒத்த இவருக்கு பைபாஸ் சர்ஜரி என்றதும் கொஞ்சம் அதிர்ந்தேன்! புகை, மது என…

தேவைப்பட்டால் காதுகளையும் மூடிக்கொள்ளலாம்!
தேவைப்பட்டால் காதுகளையும் மூடிக்கொள்ளலாம் தேசிய தொழில்நுட்ப தினம் – National Technology Day மே 11, 2019 1992 – ல் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்த காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகபட்சம் இரண்டே இரண்டு வாய்ப்புகள்தான். ஒன்று திருமணம். மற்றொன்று ஆசிரியர் பணி. அதில் உச்சமாக ஒருசிலர் பள்ளி / கல்லூரி தலைமையாசிரியர்களாகவும் /…

‘ட்ரங்க் பொட்டி’ பாட்டியின் “அதுக்குப் பேருதான்டா வாழ்க்கை” தத்துவம்
நூலாசிரியர் பாலகணேஷ் அவர்களின் தாத்தா தன் ட்ரங்க் பொட்டியில் சேகரித்து வைத்திருந்த பொக்கிஷங்களின் தொகுப்பு என் வாசிப்பு பழக்கம் எந்தப் புத்தகத்தையும் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம்வரை வரிசையாகப் படிக்க மாட்டேன். முன் அட்டை, பின் அட்டை, ஆசிரியர் உரை, பதிப்பாசிரியர் உரை என பார்த்துவிட்டு புத்தகத்தின் பக்கங்களை அப்படியே புரட்டிக்கொண்டே வருவேன். பரவலாக…

என் வாசிப்பு வழக்கம்!
என் வாசிப்பு வழக்கம்! நான் எப்போதும் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருந்து தொடங்கி கடைசி பக்கம் வரை அப்படியே படிக்க மாட்டேன். அப்படி படிக்கச் சொன்னால் ஏதோ ஒரு வளையத்துக்குள் என்னை பொருத்தி அதன் ஓட்டத்தில் மட்டுமே நான் நடக்க வேண்டும் என்று யாரோ என்னைக் கட்டுப்படுவதைப்போன்ற ஒரு மனநெருக்கடிக்கு ஆளாகிவிடுவேன். எழுத்து, ஓவியம், புகைப்படம்,…

எழுதிச் செல்லும் விதியின் கை!
இலங்கை குண்டுவெடிப்பு பிராத்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் அன்றைய தினம் எத்தனை மகிழ்ச்சியுடன் எழுந்திருத்திருப்பார்கள். ஒருவேளை இந்தக் கொடுமை நடக்காவிட்டால் மக்கள் அவரவர் குடும்பத்தோடு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி இருப்பார்கள். ஒரு விநாடியில் அத்தனை பேரின் சந்தோஷமும் சிதைந்து விட்டதே. நிச்சயமில்லாத வாழ்க்கையை நினைக்க நினைக்க வெறுமையே பதிலாகக் கிடைக்கிறது. எப்போதெல்லாம் மனம் வெறுமையாகிறதோ அப்போதெல்லாம் எனக்கு…

யார் நண்பர்?
யார் நண்பர்? ஃபேஸ்புக்கில் ஆளுக்கு 5000 நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். தெரிந்தவர் தெரியாதவர், அறிந்தவர் அறியாதவர், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர், தெரிந்த எதிரிகள் தெரியாத எதிரிகள், ஒரிஜினல் முகம் வைத்திருப்பவர் பொய் முகம் வைத்திருப்பவர் என பலதரப்பட்ட மனிதர்கள் அதில் இணைந்துள்ளனர். ஒரு சிலர் தனக்கு வருகின்ற Friends Request – களை ‘கண்களில் விளக்கெண்ணை…

ஒரு பெண்ணாக இருப்பதாலேயே! (குமுதம் ஆன்லைன் ஏப்ரல் 17, 2019)
இந்த நாள் இனிய நாள் – 76 ஒரு பெண்ணாய் இருப்பதாலேயே எல்லாவற்றிலும் சரியாகவும் சிறப்பாகவும் செயல்பட்டால்தான் பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற யதார்த்தத்தை, அவ்வப்பொழுது இந்த சமுதாயம் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது. நான் 20 வருடங்களுக்கும் மேலாக பைக்கும், 15 வருடங்களுக்கும் மேலாக காரும் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். வண்டியும், சாலையும் என் கன்ட்ரோலில் இருக்கும்…

வலம்!
வலம் இதழ்… முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில்…. மிக அழகான ஃபாண்டில்… எல்லா வயதினரும் படிக்கும் ஃபாண்ட் சைஸில்… அசத்தலான லேஅவுட். எழுதும் எழுத்தாளர்கள் அனைவருமே ஆழமான கருத்துக்களை அழகான தமிழில் எளிமையான நடையில் கொடுக்கிறார்கள். தமிழும், நடையும் அற்புதம். கதை, கட்டுரை, அரசியல், கார்ட்டூன், பயண அனுபவங்கள், ஆன்மிகம் என அத்தனையும் கிளாஸிக். குறிப்பாக…

பெயர்
நேற்று முன் தினம் ஒரு பத்திரிகைக்காக நான் கொடுத்த நேர்காணலின் ஒரு பகுதி உங்கள் பார்வைக்காக… ‘புவனேஸ்வரியில் இருந்து காம்கேர் புவனேஸ்வரி வரை…’ எப்படி சாத்தியமானது? – இதுதான் கேள்வி. ‘இரண்டு பெயர்களுமே என் அப்பா அம்மா வைத்ததுதான்… என் பெயருக்கு முழு காப்புரிமையும் என் பெற்றோருக்கே’ என்ற சிறிய நகைச்சுவையுடன் ஆரம்பித்தேன்… 25 வருடங்களுக்கு…