என்னை நானே மதிக்கக் கற்றுக்கொடுத்த ஆட்டோகிராஃப்கள் (செப் 5, 2018)

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கவிதை எழுதுவார்கள்…. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கவிதை எழுதுவது என்பது அரிதுதானே… அந்த அரிதான ஒரு நிகழ்வு என் வாழ்க்கையில்… திருமதி.ராஜாத்தி, திருமதி.மைதிலி சேகர் மற்றும் திருமதி.ஜோதிமணி இந்தப் பேராசிரியர்கள் தான் என் இன்ஸ்பிரேஷன்கள்… இப்போது இவர்கள் எங்கிருந்தாலும் வணங்குகிறேன் இந்த ஆசிரியர் தின நன்னாளில்… எதற்கெடுத்தாலும் மனதளவில் சோர்ந்து தற்கொலை வரை சென்றுகொண்டிருக்கும்…

அக்ஷர – 24 மொழிகளில் ஒரு இணைய இதழ் (செப் 3, 2018)

அக்ஷர – 24 மொழிகளில் ஒரு இணைய இதழ். akshra – Multilingual Online Journal for Indian Writing. இந்திய இலக்கியத்திற்கான பன்மொழி இணைய இதழ். சமகால இந்திய இலக்கியத்தை அந்தந்த மொழிகளின் வரி வடிவங்களிலேயே  வெளியிட இந்திய மொழிகள் இருபத்தி நான்கிற்கும் இடமளித்துள்ளது ‘அக்ஷர’. ஜூன் 2018 – ல் தொடங்கப்பட்ட அக்ஷர…

#கதை: செய்யும் தொழிலே தெய்வம்… பிள்ளையார் சுழி போட்ட கோகுலம்! (பிப்ரவரி 1982)

கோகுலம் – சிறுவர் இதழ் அக்டோபர் 2018 இதழுடன் நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து மனதுக்குள் இனம்புரியாத வலி. என் எழுத்துக்கும், நம்பிக்கைக்கும், திறமைக்கும் விதை போட்டதே கோகுலம் இதழ்தான். 1982 – ஆம் ஆண்டு கோகுலத்தில் வெளியான நான் எழுதிய  ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சிறுகதையே பிரசுரத்துக்கு ஏற்றதாக தேர்ந்தெடுக்கப்பட்ட…

பத்திரிகையாளராகவும் இருந்திருக்கிறேன் (2003)

இதுபோன்ற ஒரு ஆகஸ்ட் மாதத்தில்தான் 2003-ம் ஆண்டு கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துக்காக தொடங்கப்பட்ட ஒரு மாத இதழுக்கு எடிட்டராகவும், அதற்குத் தேவையான அனிமேஷன் சிடி தயாரித்து வெளியிடும் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டேன். ‘டிஜிட்டல் ஹைவே’–  என்ற  கம்ப்யூட்டர் மாத இதழுக்கு ஆசிரியராக  இருந்து, அந்தந்த இதழுக்குப் பொருத்தமான  ‘மல்டிமீடியா சிடி’வடிவமைத்துத் தரும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன்,  2003-ம் ஆண்டில்…

இளைஞர்களுக்கு முன்னுதாரணம்!

அமிழ்தம்/சிருஷ்டி மின்னிதழில் என் நேர்காணலை படித்துவிட்டு அதன் தொடர்ச்சியாக நேற்று வந்த ஒரு இமெயில் என் உழைப்புக்கான பரிசாக அமைந்திருந்தது. ‘அமிழ்தம் / சிருஷ்டி மின்னிதழில் தங்கள் பேட்டி படித்தேன். தங்களைப் பற்றியும் உங்கள் பேருழைப்பையும் அறிந்து வியக்கிறேன். உங்கள் கட்டுரைகளையும் நூல்களையும் தமிழில் படித்து மட்டுமே கணிணித் துறையில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டேன்….’ இப்படி…

அமிழ்தம் / சிருஷ்டி மின்னிதழ் ஆசிரியர் குழுவில் என் பங்களிப்பு (May 26, 2018)

ஷெண்பா – இவரை நான் முதன் முதலில் சந்தித்தது 2016 – ம் ஆண்டு புத்தகக் கண்காட்சியில். இவர் கல்லூரி படிக்கின்ற நாள் முதலாக என்னை பரிட்சியம் என்றும், ஜெயா டிவி, பொதிகை டிவிக்களில் நான் நடத்திவந்த தொழில்நுட்பத் தொடர்களை நிறைய பார்த்திருப்பதாகவும் அறிமுகம் செய்துகொண்டு நீண்ட நாட்கள் பழகியதைப் போல என்னுடன் பேசியது இவரது…

சமூக வலைதளங்களில் ஆண்களுக்கும் பிரச்சனைதான்! (ஜூலை 11, 2018)

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஃபேஸ்புக் புரொஃபைல் பிச்சராக தன் அப்பாவின் புகைப்படத்தை வைத்திருந்தார். 45 வயது ஆணுக்கு அப்படி என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது என்று எண்ணியபடி அவரிடம் விசாரித்தபோது, அவர் சொன்ன தகவல் எனக்கு அதிர்ச்சி மட்டுமல்ல ஆச்சர்யமும்தான். சமூக வலைதளங்களில் பெண்கள் பாலியல் ரீதியாக அச்சுருத்தப்படுகிறார்கள்… அதில் இருந்து அவர்கள் எப்படி…

சிருஷ்டி மின்னிதழ்: காம்கேரும் நானும்! (April 2018)

காம்கேரும் நானும்! சிருஷ்டி மின்னிதழுக்காக பேட்டி எடுத்தவர்: ஷெண்பா சிருஷ்டி மின்னிதழில் வாசிக்க: http://amizhthamemagazine.blogspot.com/2018/04/1.html நம் எல்லோருக்கும் ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்தான். 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் புத்தகங்கள், சுயமுன்னேற்றப் புத்தகங்கள் எழுதியவரும், தன்னம்பிக்கைப் பேச்சாளருமான  இவர் கம்ப்யூட்டரில் முதுநிலை பட்டமும் (M.Sc., Computer Science),  எம்.பி.ஏ (MBA) பட்டமும் பெற்றவர். காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்…

If anything is FREE, You are the PRODUCT – குங்குமம் (06-04-2018)

தகவல் கசிவு!  ஃபேஸ்புக்கில் நடப்பது என்ன? கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருந்து தகவல்களை எடுத்துள்ள குற்றச்சாட்டு  வைரலாகப் பரவி வருகிறது. உண்மையில் நடந்தது என்ன? ‘If anything is FREE, You are the product’ – என்பது பொதுவிதி. பொதுவாக கடைகளில் ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று…

அன்புக்கு கட்டுப்படாதது எதுவுமில்லை

நேற்று மாலை கரூரில் இயங்கி வரும் வள்ளுவர் கல்லூரியின் (Valluvar College of Science and Management, Karur) சேர்மேன் திரு. செங்குட்டுவன் அவர்கள் காம்கேர் வந்திருந்தார். நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகத்தின் மூலம் நான் எழுதி வெளியான  ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ என்ற புத்தகத்தில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை என் வாழ்க்கையில் நடந்த…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon