அப்பாம்மா, அம்மாப்பா என்ன இது!

எல்லா தலைமுறையினருக்குமான ஹீரோ! ஒருவர் தான் வாழ்ந்த காலத்தில் தன் வயதினருக்கும் (நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்), தனக்கு அடுத்த தலைமுறையினருக்கும் (பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர்கள்), அதற்கும் அடுத்த தலைமுறையினருக்கும் (பேரன் பேத்திகள், அவர்களின் நண்பர்கள்) அடுத்து வர இருக்கும் தலைமுறையினருக்கும் (கொள்ளு பேரன் பேத்திகளுக்கும்) தலைசிறந்த ரோல் மாடலாக, ஹீரோவாக, முன்னுதாரணமாக நடை உடை பாவனை,…

ஆஃபீஸில் பிழிந்து எடுக்கிறார்களா?

ஆஃபீஸில் பிழிந்து எடுக்கிறார்களா? ’உங்க பையனுக்கு / பெண்ணுக்கு Work From Home தானே அல்லது நேரடியாக ஆஃபீஸ் போக ஆரம்பிச்சுட்டாங்களா?’ இதுதான் நான் சமீபமாக சந்திக்கும் பெற்றோர்களை பார்த்து கேட்கும் கேள்வி. ‘ஆமாம்… ஒர்க் ஃப்ரம் ஹோம்னுதான் பேரு…. பிழிஞ்சு எடுக்கறாங்க…’ எழுதிக்கொடுத்து சொல்லச் சொல்வதைப் போல் அத்தனை பெற்றோரும் இதே பதிலைச் சொல்வது…

உங்கள் ‘Tagline’ என்னவென்று தெரியுமா?

உங்கள் ‘டேக்லைன்’ என்னவென்று தெரியுமா? நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எத்தனையோ நபர்களை சந்திக்கிறோம். பேசுகிறோம். பழகுகிறோம். விலகுகிறோம். நம் மனம் அவர்களை எல்லாம் எப்படி நினைவில் வைத்துக்கொள்கிறது என்பதை சற்று ஆராய்ந்தால் விசித்திரமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. ஒருவருடைய அடிப்படை இயல்பில்படி நம் மனதில் அவர்களைப் பற்றிய மதிப்பீடு பதிந்துவிடும். அந்த அடிப்படை மதிப்பீடுகளுக்கெல்லாம்…

நம்மை நாமே அதீதமாகக் கொண்டாடுவதால் தான்!

நம்மை நாமே அதீதமாகக் கொண்டாடுவதால் தான்! நம் தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, இயங்கும் துறையானாலும் சரி நின்று யோசித்துப் பார்த்தால்தான் ஏற்றமும், இறக்கமும், புகழும், அவமானமும், வலிகளும். எவ்வளவு சாதனை என மலைப்பதும், எத்தனை சோதனை என அழுவதும் நம்மை ‘நாமே’ மிகவும் பிரமிப்பாக நினைத்துக்கொண்டு யோசிப்பதால் மட்டுமே. எல்லாவற்றையும் Part of the Life…

 சூசைட் மீடியாவாகும் சோஷியல் மீடியா!

சூசைட் மீடியாவாகும் சோஷியல் மீடியா! ‘சித்திரைச் செவ்வானம்’ – சமூக வலைதளங்களால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்துப் பெண்ணும் அவளது அப்பாவும் பற்றிய திரைப்படம். அதன் முடிவில் ‘இப்போது சோஷியல் மீடியாக்கள் சூசைட் மீடியாக்களாக உள்ளன…’ என்ற ரீதியில் கருத்துச் சொல்லி முடித்திருந்தார்கள். +2-வில் நல்ல மதிப்பெண். அப்பாவின் மீது பாசமும் மரியாதையும். குறிக்கோளுடன் படித்து முன்னேறும்…

பெருமிதமும் கர்வமும்!

பெருமிதமும் கர்வமும்! இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் ஒரு டாக்டர் குறித்து எழுதி இருந்தேன் தெரியுமா? (பதிவின் லிங்க் முதல் கமெண்ட்டில்!) அவரை சந்திக்க அப்பாவுடன் சென்றிருந்தேன். அவர் குறித்து நான் எழுதி இருந்த பதிவை அவரிடம் காட்டவில்லை. சொல்லவுமில்லை. இத்தனைக்கும் அவர் ஒவ்வொரு பேஷண்ட்டுக்கும் பொறுமையாக நிறைய நேரம் செலவழித்து / ஒதுக்கும் நேரத்தை…

பெற்றோர் அல்லாமல் வேறு யார் தாங்குவார்கள்?

பெற்றோர் அல்லாமல் வேறு யார் தாங்குவார்கள்? சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மீட்டிங். அந்த நிறுவன சி.இ.ஓ என்னிடம் ‘எப்படி இந்த சிறிய வயதில் இத்தனை பெரிய பொறுப்பில் அநாயசமாக செயல்படுகிறீர்கள். அதுவும் முதல் தலைமுறை பிசினஸ் பெண்மணியாக இருந்துகொண்டு…’ என்று ஆச்சர்யப்பட்டு கேட்க அந்த மீட்டிங்கில் இருந்த அந்த நிறுவனப் பணியாளர்…

சின்ன சின்ன செய்கையில் பெரிய பெரிய சந்தோஷங்கள்!

சின்ன சின்ன செய்கையில் பெரிய பெரிய சந்தோஷங்கள்! அப்பாவுக்கு அத்தனை சந்தோஷம். பெரிய காரணம் எல்லாம் இல்லை. வாட்ஸ் அப்பில் தனக்கு வந்த ஒரு பதில் தகவலுக்குத்தான் அத்தனை மகிழ்ச்சியும் சந்தோஷமும். காரணம் இதுதான். தாடையில் சற்று வலி (பல்வலி அல்ல) இருப்பதால் பல் மருத்துவரிடம் அப்பாயின்மெண்ட் கேட்டு வாட்ஸ் அப் செய்திருந்தார். அவர் Good…

மன அழுத்தம்!

மன அழுத்தம்! சில தினங்கள் முன்பு, ‘டாணாக்காரன்’ படம் ஓடிடி-யில் பார்க்கும் வாய்ப்பு. போலீஸாய் வருவதற்கு இத்தனை கஷ்டங்கள் அனுபவிக்கிறார்களா என ஒரு க்ஷணம் தோன்றியது. அடுத்த க்ஷணம் இதில் வரும் ஈஸ்வர்மூர்த்தி போல் எல்லா நிறுவனங்களிலும் அக்கிரமம் செய்யும் அதிகாரியாக ஒரு ஆண் ஈஸ்வரமூர்த்தியோ அல்லது பெண் ஈஸ்வரமூர்த்தியோ இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன, டாணாக்காரனில்…

பேராசை!

பேராசை! முன்பெல்லாம் வீட்டு கொள்ளைப்புறத்தில் போட்டு வைத்திருக்கும் இரும்பு குழாய்கள், வேண்டாத சாமான்கள், உணர்த்தி இருக்கும் புடவைகள் போன்றவைதான் திருட்டு போகும். வீட்டுக்குள் வந்து திருடிச் செல்லும் பொருட்களும் சாதாரண சாமான்களாகவே இருக்கும். திருட்டு தொழில் செய்பவர்கள் கொலை செய்ய மாட்டார்கள். கொலையாளிகள் திருட மாட்டார்கள் என்று ஒரு தொழில் நெறிமுறைகளைக் கூட நம் பெரியவர்கள்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon