செருப்பு கடையும் ஜொலி ஜொலிக்குமே!

செருப்பு கடையும் ஜொலி ஜொலிக்குமே! நேற்று ஆதம்பாக்கம் வரை ஒரு வேலை. அப்பாவும் நானும் வேலை முடிந்து காரை நிறுத்திய இடத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தோம். வழியில் ஒரு செருப்பு கடை. சிறிய கடைதான். ஆனால் மிக மிக நேர்த்தியாக இருந்தது. செருப்புக் கடையில் என்ன நேர்த்தி அமைந்துவிடப் போகிறது என நினைக்காதீர்கள். தூசி படியாமல்…

Reading Ride: இசை கச்சேரியும், ஏஐ புத்தகமும்!

இசைக் கச்சேரிக்கு செல்பவர்கள் இசையை ரசிப்பார்கள். கூடுதலாக அங்கு கேண்டீன் போட்டிருந்தால் அந்த உணவு வகைகளை சுவைத்து சிலாகிப்பார்கள். இன்று என்னிடம் பேசியவர் சொன்ன விஷயம் இன்றைய பொழுதை இலகுவாக்கியது. இவரும் இசைக் கச்சேரிக்கு சென்றுதான் என்னை அடையாளம் கண்டு கொண்டுள்ளார். இன்று மதியம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து ஒரு போன் கால். பேசியவர் திருச்சியில்…

எத்தனை பெருமைமிகு தருணம்?

எத்தனை பெருமைமிகு தருணம்? Mind Blowing Picture! வயநாட்டின் முண்டக்கையில் நிலச்சரிவுக்குப் பிறகு, இரவும் பகலும் கடும் அயராத முயற்சியினால் 190 அடி நீளமுள்ள எஃகுப் பாலத்தை 31 மணி நேரம் தொடர்ச்சியாக பணிபுரிந்து வெற்றிகரமாக கட்டி முடித்ததுள்ளது ராணுவம். இந்த ப்ராஜெக்ட்டுக்குத் தலைமை தாங்கியவரும், இந்த சாதனைக்குக் காரணமானவரும்தான் இந்தப் புகைப்படத்தில் பெய்லி பாலத்தில்…

கடமை எனும் டாப்பிங்!

ஒரு எழுத்தாளர் தனது கட்டுரையில் ஒரு காட்சியை விவரித்து அது குறித்த தன் சிந்தனையை எழுதி இருந்தார். எப்போதோ வாசித்தது. ஆனால் சாராம்சம் மறக்கவில்லை என்பதால் என் வார்த்தைகளில் விவரித்துள்ளேன். நிச்சயம் அவர்கள் இளம் பெற்றோராகத்தான் இருக்க வேண்டும். ஸ்கூட்டியில் முன்னே பள்ளி சீருடையில் ப்ரீகேஜி படிக்கின்ற வயதில் ஒரு சிறுவன், மகனாக இருக்க வேண்டும்….

நாகரிகம் பழகுவோம்!

நாகரிகம் பழகுவோம்! சென்னை ஆதம்பாக்கம் ஸ்ரீ லஷ்மி மஹாலில் மூன்று நாட்கள் நிகழ்வாக நடைபெற்று வந்த ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு நேற்று. நிகழ்ச்சியை வருடா வருடம் சிறப்பாக நடத்தி வரும் ஸ்ரீராம் ஸேவா டிரஸ்ட், மதியம் வடை பாயசத்துடன் நிகழ்ச்சிக்கு வருகின்ற அனைவருக்கும் விருந்துக்கும் ஏற்பாடு செய்கின்றனர். நேற்று ஞாயிறு என்பதால்…

காரைக்குடி ஜாடிகள்!

காரைக்குடியில் செட்டிநாட்டு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பீங்கான் ஜாடிகள் பிரபலம். தனித்துவமாகவும் இருக்கும். பிப்ரவரி மாதம் 2024 –ல் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் Ai குறித்து பேசுவதற்காக ஒரு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். காரைக்குடி செல்வது அதுவே முதன்முறை என்பதால் கூடுதலாக இரண்டு நாட்கள் தங்கி இருந்து ஊரை சுற்றிப் பார்த்தோம். ஒருநாள் இரவு. சுற்றி…

வறட்சியாகி விட்டதா நேர்மை?

வறட்சியாகி விட்டதா நேர்மை? நேற்று வேளச்சேரியில் ஒரு பகுதியில் டிராஃபிக் ஜாம். வேளச்சேரியில் ‘டிராஃபிக் ஜாம்’ ஆகாத இடம் ஏதேனும் இருக்கிறதா என நானே என்னைக் கேட்டுக் கொண்டு எழுதுகிறேன். யோக நரசிம்மர் கோவிலின் மெயின் ரோடை பார்த்த நுழைவாயிலில் காரை நிறுத்திவிட்டு ஒருவர் உள்ளே சென்றிருப்பார் போல. அதனால் எதிரில் இருந்து பஸ் முன்னேறி…

இன்னுமா அதே கம்பெனியில் வேலை செய்கிறாய்?

இன்னுமா அதே கம்பெனியில் வேலை செய்கிறாய்? புகைப்படம்: நான்கு மாதங்களுக்கு முன்னர் (பிப்ரவரி மாதம்) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் Ai குறித்து பேசுவதற்காக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு எடுத்த செல்ஃபி. —- இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 14 வருடங்களுக்கு மேல் பணிபுரியும் ஒரு இளைஞரை (36) சந்தித்தேன். அவருடைய அப்பா அம்மா எங்கள் குடும்ப நண்பர்கள்…

திருமணங்கள்!

திருமணங்கள்! ஒரு பெண் 53 ஆண்களை மேட்ரிமோனி வெப்சைட் மூலம் தொடர்பு கொண்டு ஏமாற்றி திருமணம் செய்ததுதான் நேற்றைய பேசுபொருள். இதற்கு தன் சொந்தப் பதிவுகள் மூலமும், பிறரது பதிவுகளுக்கு கமெண்ட் செய்வதன் மூலமும் வயது வித்தியாசம் இல்லாமல் நிறைய ஆண்கள், தங்கள் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்கள். ஒவ்வொன்றிலும் மூன்றாம்தர எண்ண ஓட்டங்கள், வக்கிர எண்ணங்கள். என்னடா…

Favour அல்ல Privilege!

Favour அல்ல Privilege! ஒரு முறை என் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கோயில் சென்றுவிட்டு அருகிலேயே கைவினைப்பொருட்கள் மற்றும் உடைகள் கண்காட்சி போட்டிருந்ததால் அங்கும் சென்றிருந்தோம். ஒரு சுடிதாரை என் அப்பாம்மாவிடம் காண்பிப்பதற்காக ‘அப்பா… அம்மா…’ என சப்தமாக கூப்பிட்டேன். உடன் வந்திருந்த உறவினர் ‘பெரிய கம்பெனி நடத்துகிறாய்… ஒரு சுடிதார் வாங்குவதற்கு அப்பா அம்மாவை…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon