
ஆஹா ஆசுவாசம்!
ஆஹா ஆசுவாசம்! இப்போதெல்லாம் ‘இது கூடவா தெரியாமல் இருக்கும்?’ என்று மேன்மையாக யோசித்து, ‘இதுவும் தெரியாமல் இருக்கலாம்’ என ஜாக்கிரதையாக சிந்தித்து இரண்டுக்கும் இடையில் மனதை பண்படுத்தி அவர்களுக்குத் தோதாக இன்புட்டுகளை கொடுத்து தட்டிக் கொடுத்து செயல்பட வேண்டி உள்ளது. ஒரு பிரிண்ட்டிங் பணிக்காக சென்னையிலேயே மிகப்பெரிய அச்சகத்தாருடன் மல்லு கட்டிய பொழுதில் உதித்த பொன்…

விருதுகளும், தேர்வாளர்களும்!
விருதுகளும், தேர்வாளர்களும்! தொழில்நுட்பப் புத்தகங்களை விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உள்ளவர்கள் அந்தத் துறையில் ஒரு துளியும் அப்டேட் ஆகாதவர்களாக இருப்பதும், அவர்கள் அந்த நூலாசிரியரை மதிப்பிடும் முறையை நினைத்தும் பலமுறை சினம் கொண்டதுண்டு. (மனதுக்குள்தான்) சில வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய ‘போட்டோஷாப்’ புத்தகம் ஒரு சேவை நிறுவனத்தில் விருதுக்குத் தேர்வாகியது. அந்தக் குழுவில் இருந்தவர்தான்…

நிதர்சனங்களும், அபத்தங்களும்!
நிதர்சனங்களும், அபத்தங்களும்! என்னையும் காம்கேரையும் 25, 30 வருடங்களுக்கு முன் அறிந்தவர்கள், என்னைப் பற்றியோ (காம்கேர் புவனேஸ்வரி) பற்றியோ அல்லது எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் பற்றியோ எதையுமே அப்டேட் செய்துகொள்ளாமல், நீண்ட காலத்துக்குப் பிறகு என்னை சந்திக்கவோ அல்லது போனில் பேசவோ செய்பவர்கள் ‘நீங்க காம்கேர்ன்னு ஒரு வச்சிருந்தீங்களே…. அது இருக்கா… மூடிட்டீங்களா’ அப்படின்னு…

Ai என்பது அனிமேஷனா?
Ai என்பது அனிமேஷனா? நங்கநல்லூரில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று. காம்கேரில் நாங்கள் அனிமேஷன் சிடிக்கள் விற்பனை செய்து வந்த சமயம் அவர்களிடமும் விற்பனைக்குக் கொடுப்போம். சிடிக்கள் காலம் முடிந்த பிறகு பெரிய அளவில் தொடர்பில் இல்லை. எங்கள் குடும்ப நிகழ்ச்சிக்காக சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது. அப்பாதான் மாடல் அனுப்பி…

விஞ்ஞான கண்டுபிடிப்புகளும், சமூக வலைதளங்களும்!
பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ரிலாக்ஸ்டான மனநிலையில் இருக்கும்போதுதான் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும், நம் வியாபாரத்துக்கு எப்படி சமூக வலைதளங்களை பயன்படுத்தலாம் என்பதையும் ஒரு ஜென் கதை மூலம் விளக்கி இருக்கிறேன், 10 ஆண்டுகளுக்கு முன்பே, மக்கள் தொலைக்காட்சியில். இந்த நிகழ்ச்சி குறித்து, இரண்டு தினங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தேன். இது நான் நிகழ்த்திய 2500 க்கும்…

நல்லதை விதைக்கத் தவறினால்!
தி கேரளா ஸ்டோரி! – திரைப்படம் வெளியாகி மிகத் தாமதமாகவே பார்த்தேன் நேற்று. ஒவ்வொரு காட்சியும் பதபதைக்க வைக்கிறது. ‘குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள், நல்லபடியாக ஆளாக்குங்கள்’ என்று மட்டுமே சொல்ல முடிகிறது. நாம் நம் இருப்பிடத்திலும், நம்மைச் சுற்றியும் நமக்குத் தேவையான நல்லவற்றை, நல்ல ஒழுக்கத்தை நாம் விதைக்கவும் பரப்பவும் பாதுகாக்கவும் தவறினால், மற்றவர்கள்…

வாயாடி என சொல்லாதீர்கள், குரல்வளையை நசுக்காதீர்கள்!
வாயாடி என சொல்லாதீர்கள், குரல்வளையை நசுக்காதீர்கள்! ஒரு குடும்ப நிகழ்வு. வயது வித்தியாசமின்றி சிறியவர் பெரியவர் என அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். 70 வயது தாத்தா ஒருவர், மூன்றாம் வகுப்புப் படிக்கின்ற சுட்டியிடம் விளையாட்டாக ‘என்னை கல்யாணம் பண்ணிக்கறியா?’ என வேடிக்கையாக கேட்டார். அதற்கு அந்த சிறுமி, ‘ஏன் பாட்டி அழகாகத் தானே இருக்கா?’…

ஜனநாயகக் கடமை!
ஜனநாயகக் கடமையை செய்ய எங்கள் இருப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள பள்ளிக்கு 7 மணிக்கே அப்பா அம்மாவுடன் சென்றுவிட்டேன். எங்களுக்கும் முன்பே அந்தப் பள்ளியில் உள்ள அத்தனை வார்டுகளிலும் மக்கள் வரிசையில் நின்றிருந்தார்கள். குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் பார்ப்பதற்கே ரம்யமாக இருந்தது. எங்கள் வார்டை தவிர மற்ற வார்டுகளில் உள்ள வரிசை வெகு சீக்கிரம் நகர்ந்து கொண்டே…

அம்மா செளக்கியம், அப்பாவும் நன்றாக இருக்கிறார்!
அம்மா செளக்கியம், அப்பாவும் நன்றாக இருக்கிறார்! ‘நீங்க உங்க அப்பா அம்மாவை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதாக சென்ற பதிவில் சொல்லி இருந்தீர்களே, அதை மற்றவர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள். அவ்வளவு அன்பாக, மரியாதையாக பொதுவெளியில் நடந்து கொள்வீர்களா? என் பிள்ளைகளை இப்போதில் இருந்தே அப்படி வளர்க்கவே கேட்கிறேன்’ என்று ஒரு நடுத்தர வயது…

கண் திருஷ்டி!
கண் திருஷ்டி! ஒரு டாக்ஷோவில் தன் மகன் 20 தோசைகள் சாப்பிடுவான், அதுவும் எப்படி தெரியுமா? என்று பெருமையுடன் பேசிய ஒரு அம்மாவின் மகன் அண்மையில் ரயில் விபத்தில் இறந்துவிட்டதாக செய்தி வந்தபோது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் அனுதாபிகளின் கருத்து என்ன தெரியுமா? ‘திருஷ்டி பட்டுவிட்டது’. உண்மைதான். இதில் உங்களுக்கெல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ நிச்சயமாக…