
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[7] : எல்லாவற்றிலும் வெற்றிபெற வேண்டுமா! (நம் தோழி)
ஒரு வேலையை இலக்காக்கிக்கொண்டால் அந்த இலக்கை நாம் பற்றிக்கொள்கிறோமா அல்லது இலக்கு நம்மைப் பற்றிக்கொள்கிறதா என்பதில்தான் இருக்கிறது வெற்றியின் சூட்சுமம். ஒரு நாட்டில் ஒரு ஜென் குரு இருந்தார். அவர் மிகச் சிறந்த வாள் வீரர். அவரைச் சந்திக்க வந்த புதிய சீடன் ஒருவன், ‘இந்த நாட்டிலேயே மிகச்சிறந்த வாள் வீரனாக வேண்டும்… உங்களால் பயிற்சி…

வாழ்க்கையின் OTP-15 (புதிய தலைமுறை பெண் – அக்டோபர் 2019)
அக்டோபர் 2. காந்தி ஜெயந்தி. அவர் குறித்த சிந்தனைகளை நம் வாழ்வியலோடு இணைத்துப் பார்ப்போமா? என் குணநலன்களை தனிப்பட்ட வாழ்க்கைக்காகவும் பணிரீதியாகவும் இருவேறு விதமாக பிரிக்க இயலாது. பொதுவாகவே என்னுடைய பாதையில் நேர்மையாக சென்றுகொண்டிருப்பதற்கும் நான் சரியாக செயல்படுவதற்கும் மூன்று விஷயங்களைச் சொல்லலாம். முதலாவது… ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொள்வது. அதற்கானப் பாதையை உருவாக்குவது. அதில் நேர்மையாகப்…

#கதை: பிரார்த்தனை – விஜயபாரதத்தில் வெளியான சிறுகதை (2016)
என்னைச் சுற்றித்தான் எத்தனை கம்பி வெலிகள். கூட்டம் கூட்டமாய் மனிதர்கள்? கைக் குழந்தைகளோடும், ஒரு இடத்தில் கால் பாவாமல் ஓடும் விளையாட்டுப் பிள்ளைகளோடும், வயதான காலத்தில் கைத்தடிகளை ஊன்றிக் கொண்டும் தவமாய் தவம் கிடக்கும் மனிதர்களைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது. கூட்டம், வரைமுறை இல்லாத நெரிசல், வியர்வை, நாற்றம், இருமல், கைக் குழந்தைகளின் அழுகைகள், விளையாட்டுப்…

#கதை: சாவியில் பரிசு பெற்ற சிறுகதை – ‘நியதிகள் மாறலாம்’ (நவம்பர் 1990)
1990 ஆம் ஆண்டு நான் எழுதி சாவி இதழில் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை. அந்தந்த காலகட்டத்தை படம்பிடித்துக் காட்டுபவையே கலைகள். அது எந்த வடிவத்தில் இருந்தாலும். நியதிகள் மாறலாம்! என்ற இந்த சிறுகதை அந்த காலத்தில் பெண்களின் நிலையை அப்படியே படம் பிடித்து காட்டுவதைப் போல உள்ளது. பொறுமை இருப்பவர்கள் முழுமையாக படித்துப்…

வாழ்க்கையின் OTP-14 (புதிய தலைமுறை பெண் – செப்டம்பர் 2019)
பொதுவாகவே மனிதர்களுக்கு உண்ண உணவும், இருக்க இடமும், உடுக்க உடையும் அத்தியாவசியம்தான். ஆனால் இவை மட்டுமே மனிதனை நிறைவாக வாழ வைத்துவிடுவதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் தன்னிறைவும், நமக்கான முக்கியத்துவமும், நம் செயல்களுக்கான அங்கீகாரமும் அவசியமாகிறது. நாம் எப்படி இதையெல்லாம் மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறோமோ அதை மற்றவர்களுக்குக் கொடுக்கவும் தவறக் கூடாது. ஒரு சிலர் பிறரின் கருத்துக்களை…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[6] : உங்களுக்கு யார் பாஸ்! (நம் தோழி)
பலருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதைவிட தானே ஒரு பிசினஸ் தொடங்குவதில் விருப்பம் இருக்கிறது. தவறில்லை. ஆனால் சில புரிதல்களை மனதில் நிறுத்திக்கொண்டுத் தொடங்க வேண்டும். பல வருடங்களாக பத்திரிகை துறையில் பணிபுரிந்த நண்பர் ஒருவர் அவர் மனைவியுடன் சேர்ந்து கேட்டரிங் பிசினஸ் தொடங்கியபோது என்னிடம் அவர் பகிர்ந்துகொண்டவை இன்றும் நினைவில் இருக்கிறது. ‘ஒருவரிடம் கை…

நோ காம்ப்ரமைஸ்
தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்! சில மாதங்களுக்கு முன்னர் மின்னம்பலம் டாட் காமில் நான் எழுதிவந்த ‘கனவு மெய்ப்பட’ என்ற கட்டுரைத் தொடரில் No Compromise என்ற கட்டுரையை எழுதி இருந்தேன். அதில் தங்கள் கொள்கைகளை எதற்கும் காப்ரமைஸ் செய்துகொள்ளாமல் சிறப்பாக செயல்பட்டுவரும் வெவ்வேறு துறைசார்ந்த…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[5] : மனதுக்கும் உண்டு டயட்! (நம் தோழி)
ஒரு சிலரை கவனித்திருக்கிறேன். நன்றாகத்தான் இருப்பார்கள். ஆனால் திடீரென உடல் சோர்ந்து கன்னம் ஒட்டி காட்சியளிப்பார்கள். விசாரித்தால் டயட்டில் இருக்கிறேன் என்பார்கள். டயட்டில் இருந்தால் முன்பைவிட புத்துணர்வாக அல்லவா இருக்க வேண்டும். இப்படி உடல் வற்றிப் போவதற்குக் காரணம், அவர்கள் சரியான டயட்டில் இருப்பதில்லை. காலை டிபனை தவிர்த்தல், மதியம் முற்றிலும் அரிசியைத் தவிர்த்துவிட்டு சப்பாத்தி,…

வாழ்க்கையின் OTP-13 (புதிய தலைமுறை பெண் – ஆகஸ்ட் 2019)
கடவுள் நம்பிக்கை என்பது நமக்கு உள்ளே நிகழும் அற்புதம். அதற்கு அந்த நம்பிக்கையே சாட்சியாகும். அந்த நம்பிக்கைக்கு உருவகம் கிடையாது. அதனால் அவரவர்கள் உணர்ந்தால்தான் உண்டு. அதை நிரூபணமும் செய்ய முடியாது. ஆனால், நம் உடலுக்கு வெளியே நடக்கும் பலவற்றுக்கு அறிவு சாட்சியாகும். உதாரணத்துக்கு, புகழ்பெற்ற பாடகர் ஒருவரின் கச்சேரிக்கு கூட்டம் அலைமோதுகிறது. அந்தக் கூட்டமும்,…

யசோதையின் கண்ணன் – சிறுகதைத் தொகுப்பு
சிறுகதைத் தொகுப்பு – யசோதையின் கண்ணன் கதையாசிரியர்: கமலா நடராஜன் பதிப்பகம்: காயத்திரி பதிப்பகம் (044-24898162) ‘யசோதையின் கண்ணன்’ என்ற சிறுகதை தொகுப்பின் பெயரே ஈர்ப்பாக இருக்க, அந்தக் கதையையே முதல் கதையாக எடுத்துப் படித்தேன். ஒரு சினிமா எடுக்கும் அளவுக்கு கருத்தும் கற்பனையும் நிறைந்த பாசமும் பரிதவிப்பும் கலந்த ஒரு நெடும் நாவலை கதையாக்கியுள்ள…