அம்மா செளக்கியம், அப்பாவும் நன்றாக இருக்கிறார்!

அம்மா செளக்கியம், அப்பாவும் நன்றாக இருக்கிறார்! ‘நீங்க உங்க அப்பா அம்மாவை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதாக சென்ற பதிவில் சொல்லி இருந்தீர்களே, அதை மற்றவர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள். அவ்வளவு அன்பாக, மரியாதையாக பொதுவெளியில் நடந்து கொள்வீர்களா? என் பிள்ளைகளை இப்போதில் இருந்தே அப்படி வளர்க்கவே கேட்கிறேன்’ என்று ஒரு நடுத்தர வயது…

கண் திருஷ்டி!

கண் திருஷ்டி! ஒரு டாக்‌ஷோவில் தன் மகன் 20 தோசைகள் சாப்பிடுவான், அதுவும் எப்படி தெரியுமா? என்று பெருமையுடன் பேசிய ஒரு அம்மாவின் மகன் அண்மையில் ரயில் விபத்தில் இறந்துவிட்டதாக செய்தி வந்தபோது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் அனுதாபிகளின் கருத்து என்ன தெரியுமா? ‘திருஷ்டி பட்டுவிட்டது’. உண்மைதான். இதில் உங்களுக்கெல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ நிச்சயமாக…

நேர்மைதான் கவிதை!

நேர்மைதான் கவிதை! இன்று, என்னிடம் ஒரு வாசகர் பேச விரும்புவதாக உதவியாளர் தகவல் கொடுக்க, மீட்டிங்கை முடித்துவிட்டு அவரிடம் நானே போன் செய்து பேசினேன். ‘யார் பேசறீங்க… காம்கேர் புவனேஸ்வரி மேடம் தானே?’ என ஒரு முறைக்கு இருமுறையாக கேட்டார். ‘ஆமாம் சார், ஏன் கேட்கறீங்க திரும்பத் திரும்ப?’ என்று கேட்டேன். ‘இவ்வளவு பெரிய பதவில…

ஓலைச் சுவடியில் இராமாயணம்!

ஆவணப் படம் – ஓலைச் சுவடியில் இராமாயணம்! ஓலைச் சுவடியில் இராமாயணத்தின் 3 பிரதிகளை எழுதிய தன் தாத்தா வீரராகவ சாஸ்திரி குறித்து விரிவாக தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் பேரன் திரு. வெங்கட்டரமணன். (இவர் எங்கள் உறவினர்) இவர் தன் வீட்டின் முகப்பில் ஜனவரி 19, 2024 முதல் ஜனவரி 23, 2024 வரை ஐந்து…

பொம்மைக்கார வீதி தொழிலதிபர்கள்!

பொம்மைக்கார வீதி தொழிலதிபர்கள்! சமீபத்தில் காஞ்சிபுரத்தில் காஞ்சி மடத்துக்குச் சென்று தரிசனம் செய்த பிறகு, காஞ்சிப் பெரியவரின் மகா மண்டபம் அமைந்துள்ள ஓரிக்கைக்கும் சென்று வந்தோம். பின்னர், கொலு பொம்மைகளை தயார் செய்து விற்பனை செய்யும் கடைகளுக்கும் சென்று வந்தோம். கடைகள் என்று அவற்றை சொல்ல முடியாது. வீடுகளே தொழிற்சாலைகள் போல செயல்பட்டு வரும் ‘பொம்மைக்காரத்…

குழந்தையும், தெய்வமும்!

குழந்தையும், தெய்வமும்! கும்பகோணத்துக்கு அருகில் ஒரு சிறு கிராமம். ஓட்டு வீடுகள் நிறைந்த அந்த சிறு கிராமத்தில் நான் சென்றிருந்த வீடு இருந்த தெருவின் ஒரு எல்லையில் கோயில். மறு எல்லையில் மற்றொரு கோயிலும் அதை ஒட்டி ஒரு பள்ளியும். பார்க்கவே தெய்வீகமாக இருந்தது. அந்த வீட்டின் வாசலில் பூத்துக் குலுங்கி இருந்த செம்பருத்திப் பூக்களை…

இன்றைய இளைஞர்கள்!

இன்றைய இளைஞர்கள்! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!  என் வாழ்நாளில் தீபாவளிக்கு முதல் நாள் வெளியூரில் இருந்ததில்லை. இதுவே முதல் முறை. திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் என எல்லா ஊர்களிலும் கூட்டமான கூட்டம். எறும்புகள் இடைவெளி இல்லாமல் சாரை சாரையாக செல்வதைப் போல் சாலை முழுவதும் சிறு இடைவெளி இல்லாமல் ஜனக்கூட்டம். திருச்சியில் நாங்கள்…

பேச்சாயிகள் சூழ் உலகு!

பேச்சாயிகள் சூழ் உலகு! முக்கியமான விஷயமாக திருச்சி பயணம். வேலை முடிந்த பிறகு மெயின்கார்ட் கேட்டில் உள்ள மிக பிரமாண்டமான கடையில் பூஜை சாமான்களுக்கென்றே பிரத்யோகமாக உள்ள ஒரு தளத்துக்குச் சென்றோம். அங்கு 19-21 வயதுக்குட்பட்ட ஒரு இளம் விற்பனைப் பெண் பணியாளர் பாவனையில்லா உளமார்ந்த சிரித்த முகத்துடன் எங்களுக்குத் தேவையான சாமான்களை எடுத்துக் காட்டிக்…

எழுத்தின் வலிமை!

எழுத்தின் வலிமை! நேற்று ஒரு துணிக் கடையில் பில்லிங் செக்‌ஷனில், எதிர்பாராதவிதமாக ஒருவர் என் அருகில் வந்து கொஞ்சம் சப்தமாகவே ‘ஹலோ காம்கேர் புவனேஸ்வரி மேடம்…’ என கேட்க நான் சற்று பரபரப்பாக பின் திரும்பிப் பார்த்தேன். 65+ மதிப்புமிக்க ஒரு பெண்மணி சிரித்த முகத்துடன் எனக்கு கைக் கொடுத்து ‘நான் உங்கள் ஃபேஸ்புக் ஃபேன்…’…

புத்தகங்கள் கொடுத்த பரிசு!

புத்தகங்கள் கொடுத்த பரிசு! இன்று மாலை 4 மணி, என் மனதுக்கு மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இன்று காலையில் எழுதிய பதிவில் Ai – காக இரண்டு புத்தகங்கள் எழுதி முடித்துள்ளேன் என வெகு நாசூக்காக பதிவுகளின் ஊடே பட்டும் படாமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை போலவும் இல்லாமல் அறிவிக்காததை போலவும் இல்லாமல் சொல்லி இருந்தேன். அதனை…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon