Ai என்பது அனிமேஷனா?

Ai என்பது அனிமேஷனா? நங்கநல்லூரில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று. காம்கேரில் நாங்கள் அனிமேஷன் சிடிக்கள் விற்பனை செய்து வந்த சமயம் அவர்களிடமும் விற்பனைக்குக் கொடுப்போம். சிடிக்கள் காலம் முடிந்த பிறகு பெரிய அளவில் தொடர்பில் இல்லை. எங்கள் குடும்ப நிகழ்ச்சிக்காக சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது. அப்பாதான் மாடல் அனுப்பி…

விஞ்ஞான கண்டுபிடிப்புகளும், சமூக வலைதளங்களும்!

பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ரிலாக்ஸ்டான மனநிலையில் இருக்கும்போதுதான் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும், நம் வியாபாரத்துக்கு எப்படி சமூக வலைதளங்களை பயன்படுத்தலாம் என்பதையும் ஒரு ஜென் கதை மூலம் விளக்கி இருக்கிறேன், 10 ஆண்டுகளுக்கு முன்பே, மக்கள் தொலைக்காட்சியில். இந்த நிகழ்ச்சி குறித்து, இரண்டு தினங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தேன். இது நான் நிகழ்த்திய 2500 க்கும்…

நல்லதை விதைக்கத் தவறினால்!

தி கேரளா ஸ்டோரி! – திரைப்படம் வெளியாகி மிகத் தாமதமாகவே பார்த்தேன் நேற்று. ஒவ்வொரு காட்சியும் பதபதைக்க வைக்கிறது. ‘குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள், நல்லபடியாக ஆளாக்குங்கள்’ என்று மட்டுமே சொல்ல முடிகிறது. நாம் நம் இருப்பிடத்திலும், நம்மைச் சுற்றியும் நமக்குத் தேவையான நல்லவற்றை, நல்ல ஒழுக்கத்தை நாம் விதைக்கவும் பரப்பவும் பாதுகாக்கவும் தவறினால், மற்றவர்கள்…

வாயாடி என சொல்லாதீர்கள், குரல்வளையை நசுக்காதீர்கள்!

வாயாடி என சொல்லாதீர்கள், குரல்வளையை நசுக்காதீர்கள்! ஒரு குடும்ப நிகழ்வு. வயது வித்தியாசமின்றி சிறியவர் பெரியவர் என அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். 70 வயது தாத்தா ஒருவர், மூன்றாம் வகுப்புப் படிக்கின்ற சுட்டியிடம் விளையாட்டாக ‘என்னை கல்யாணம் பண்ணிக்கறியா?’ என வேடிக்கையாக கேட்டார். அதற்கு அந்த சிறுமி, ‘ஏன் பாட்டி அழகாகத் தானே இருக்கா?’…

ஜனநாயகக் கடமை!

ஜனநாயகக் கடமையை செய்ய எங்கள் இருப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள பள்ளிக்கு 7 மணிக்கே அப்பா அம்மாவுடன் சென்றுவிட்டேன். எங்களுக்கும் முன்பே அந்தப் பள்ளியில் உள்ள அத்தனை வார்டுகளிலும் மக்கள் வரிசையில் நின்றிருந்தார்கள். குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் பார்ப்பதற்கே ரம்யமாக இருந்தது. எங்கள் வார்டை தவிர மற்ற வார்டுகளில் உள்ள வரிசை வெகு சீக்கிரம் நகர்ந்து கொண்டே…

அம்மா செளக்கியம், அப்பாவும் நன்றாக இருக்கிறார்!

அம்மா செளக்கியம், அப்பாவும் நன்றாக இருக்கிறார்! ‘நீங்க உங்க அப்பா அம்மாவை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதாக சென்ற பதிவில் சொல்லி இருந்தீர்களே, அதை மற்றவர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள். அவ்வளவு அன்பாக, மரியாதையாக பொதுவெளியில் நடந்து கொள்வீர்களா? என் பிள்ளைகளை இப்போதில் இருந்தே அப்படி வளர்க்கவே கேட்கிறேன்’ என்று ஒரு நடுத்தர வயது…

கண் திருஷ்டி!

கண் திருஷ்டி! ஒரு டாக்‌ஷோவில் தன் மகன் 20 தோசைகள் சாப்பிடுவான், அதுவும் எப்படி தெரியுமா? என்று பெருமையுடன் பேசிய ஒரு அம்மாவின் மகன் அண்மையில் ரயில் விபத்தில் இறந்துவிட்டதாக செய்தி வந்தபோது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் அனுதாபிகளின் கருத்து என்ன தெரியுமா? ‘திருஷ்டி பட்டுவிட்டது’. உண்மைதான். இதில் உங்களுக்கெல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ நிச்சயமாக…

நேர்மைதான் கவிதை!

நேர்மைதான் கவிதை! இன்று, என்னிடம் ஒரு வாசகர் பேச விரும்புவதாக உதவியாளர் தகவல் கொடுக்க, மீட்டிங்கை முடித்துவிட்டு அவரிடம் நானே போன் செய்து பேசினேன். ‘யார் பேசறீங்க… காம்கேர் புவனேஸ்வரி மேடம் தானே?’ என ஒரு முறைக்கு இருமுறையாக கேட்டார். ‘ஆமாம் சார், ஏன் கேட்கறீங்க திரும்பத் திரும்ப?’ என்று கேட்டேன். ‘இவ்வளவு பெரிய பதவில…

ஓலைச் சுவடியில் இராமாயணம்!

ஆவணப் படம் – ஓலைச் சுவடியில் இராமாயணம்! ஓலைச் சுவடியில் இராமாயணத்தின் 3 பிரதிகளை எழுதிய தன் தாத்தா வீரராகவ சாஸ்திரி குறித்து விரிவாக தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் பேரன் திரு. வெங்கட்டரமணன். (இவர் எங்கள் உறவினர்) இவர் தன் வீட்டின் முகப்பில் ஜனவரி 19, 2024 முதல் ஜனவரி 23, 2024 வரை ஐந்து…

பொம்மைக்கார வீதி தொழிலதிபர்கள்!

பொம்மைக்கார வீதி தொழிலதிபர்கள்! சமீபத்தில் காஞ்சிபுரத்தில் காஞ்சி மடத்துக்குச் சென்று தரிசனம் செய்த பிறகு, காஞ்சிப் பெரியவரின் மகா மண்டபம் அமைந்துள்ள ஓரிக்கைக்கும் சென்று வந்தோம். பின்னர், கொலு பொம்மைகளை தயார் செய்து விற்பனை செய்யும் கடைகளுக்கும் சென்று வந்தோம். கடைகள் என்று அவற்றை சொல்ல முடியாது. வீடுகளே தொழிற்சாலைகள் போல செயல்பட்டு வரும் ‘பொம்மைக்காரத்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon